சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனை விளம்பரப்படுத்தும் வகையில் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் செஸ் ஒலிம்பியாட் இலச்சினை ஒட்டு வில்லைகளை, மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ் ஒட்டினார். அருகில் மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன், அரசுப் போக்குவரத்து கழக கிளை மேலாளர் இராமமூர்த்தி, மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்குமார் ஆகியோர்.