மதுரை, ஏப்.25-
டெல்டாவில் 37 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்கான கட்டு மானப் பணிகளுக்கான அடிக் கல் நாட்டுவிழா செவ்வா யன்று நடைபெற்றது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார் பில் அரியலூர், மயிலாடு துறை, புதுக்கோட்டை, திரு வள்ளூர், சிவகங்கை, திருச்சி ராப்பள்ளி, தஞ்சாவூர், திரு வாரூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் 93 கோடியே 3 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,16,800 மெட்ரிக் டன் கொள் ளளவு கொண்ட 84 மேற் கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்புத் தளங் களை தமிழ்நாடு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் செவ் வாயன்று திறந்துவைத்தார்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தலா 250 மெட்ரிக் டன் நெல்லை சேமித்து வைத்க்கும் வகை யில் தஞ்சாவூர் மாவட்டத் தில் 20 நிலையங்கள், திரு வாரூர் மாவட்டத்தில் 10, நாகப்பட்டினம் மற்றும் மயி லாடுதுறை மாவட்டங்களில் தலா ஏழு, திண்டுக்கல் மாவட்டத்தில் ஒன்பது, புதுக்கோட்டை மற்றும் திரு நெல்வேலி மாவட்டங்களில் தலா மூன்று, கடலூர் மாவட் டத்தில் இரண்டு, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா ஒன்று என மொத்தம் பத்து மாவட் டங்களில் 39 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 63 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டுவதற்கான பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.