districts

img

திருச்சி மாநகராட்சி 35 ஆவது வார்டு சிபிஎம் வேட்பாளர் எஸ்.சுரேஷ் வாக்கு சேகரிப்பு

திருச்சிராப்பள்ளி, பிப்.11 - திருச்சி மாநகராட்சி 35 ஆவது வார்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டி யிடும் வேட்பாளர் எஸ்.சுரேஷ் அரிய மங்கலம் தெற்கு உக்கடை பகுதியில் வெள்ளியன்று தீவிர வாக்குச் சேகரிப் பில் ஈடுபட்டார். வாக்குச் சேகரிப்பின் போது, திமுக வட்ட செயலாளர் தங்கவேல், அவைத்  தலைவர் சாகுல் அமீது, வட்ட துணைச் செயலாளர் ரசாக், தமுமுக வட்ட செய லாளர் முஜிபூர், நிர்வாகிகள் சேட்டு, பயாஸ், மதிமுக வட்ட செயலாளர் சர வணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயபால், முன்னாள் மாமன்ற உறுப்பி னர் கனல்கண்ணன், கிளை செயலா ளர் எலிசபெத்ராணி, சாகுல்ஹமீது, செல்வராஜ் உள்பட பலர் மேளதாளத் துடன் வீடு, வீடாக சென்று துண்டு பிர சுரம் கொடுத்து அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர்.