பெரம்பலூர், அக்.16 - நான்கு வயது சிறுமிக்கு மீது பாலியல் தாக்குதல் நடத்திய இளைஞருக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்து பெரம்பலூர் மக ளிர் நீதிமன்றம் தீர்ப்ப ளித்துள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட் டம், ஸ்ரீரங்கம் கிருஷ்ணன் கோயில் தெரு, கீழவாசல் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் (19). இவர், பெரம்ப லூர் மாவட்டம் புதுக்குறிச்சி கிராமத்தில் தங்கியிருந்த போது, கடந்த 23.7. 2021 அன்று நான்கு வயது சிறுமி ஒருவரை, தனது அம்மாச்சி வீடான இந்தி ராணி வீட்டிற்கு கடத்திச் சென்று பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர் பாக பாதிக்கப்பட்ட சிறுமி யின் அம்மா கொடுத்த புகா ரின்பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து பிரதீப்பை கைது செய்தனர். அந்த வழக்கின் விசாரணை பெரம்பலூர் மக ளிர் நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்ற அமர்வு நீதிபதி இந்திராணி சிறு மியை கடத்திய குற்றத்திற் காக 10 ஆண்டுகள் கடுங்கா வல் சிறையும், ரூ.50,000 அப ராதமும், அபராதம் கட்ட தவ றினால் மேலும் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். சிறுமிக்கு எதி ராக பாலியல் தாக்குதல் செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின்கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.50, 000 அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண் டனை விதித்தும் தீர்ப்பு வழங்கினார். அபராதத் தொகையில் ரூ.50,000-ஐ பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங் கவும், தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வும் நீதிபதி உத்தரவிட்டார். மேற்படி தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வும் நீதிபதி செவ்வாயன்று உத்தரவிட்டார். உத்தரவினை தொ டர்ந்து போலீசார் பிரதீப்பை திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைத்தனர்.