அரியலூர், செப்.28 - 30 சதவீத தள்ளுபடி விலையில் கோ ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனையை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் கோ-ஆப்டெக்ஸ் ஆண்டு தோறும் தீபாவளி சிறப்பு விற்ப னையை நடத்தி வருகிறது. இதனொரு பகுதி யாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத் தில் உள்ள கோஆப்டெக்ஸ் தீபாவளி விற்ப னையை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி சனிக்கிழமை தொடங்கி வைத்தார். இதில் சேலம், ஆரணி, காஞ்சிபுரம், திருபுவனம் ஆகிய பகுதிகளில் உற்பத்தி செய்யப் படும் பட்டுப் புடவைகள், நெச வாளர்களின் கைவண்ணத்தில் உருவான சேலைகள்-வேஷ்டி கள் உள்ளிட்ட ஏற்றுமதி தரம் வாய்ந்த துணிகள் விற்பனைக் காக வைக்கப்பட்டுள்ளன. தீபா வளியையொட்டி, அனைத்து ஜவுளிகளுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் விலையில் 30 சதவீத தள்ளு படி வழங்கப்படுகிறது. நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாது காக்கும் வகையில், தீபாவளிக்கு கோஆப் டெக்ஸில் ஆடைகளை வாங்கி பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித் துள்ளார்.