புதுக்கோட்டை, செப்.29 - இலங்கை அரசினால் கைப்பற்றப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 3 படகு உரிமையாளர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மணமேல்குடி வட்டத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி, மரிய சாமுவேல் ஆகியோரின் 2 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம், ஜெயஇருதயம் என்பவரின் ஒரு நாட்டுப்படகு உரிமையாள ருக்கு ரூ.1,50,000 என மொத்தம் ரூ.11,50,000 மதிப்பிலான முதலமைச்சரின் பொது நிவாரண நிதி உதவித்தொகைக்கான காசோலைகளை வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா வழங்கினார்.