districts

3 குற்றவியல் சட்ட நகலை எரிக்க அனைத்து தொழிற்சங்கங்கள் முடிவு

திருச்சிராப்பள்ளி,ஆக.1- அனைத்து மத்திய தொழிற் சங்கங்களின் கூட்டம் திருச்சி மிளகு பாறை தொமுச அலுவலகத்தில். தொமுச மாவட்ட செயலாளர் ஜோசப் நெல்சன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிஐடியூ மாவட்ட செயலாளர் ரெங்கராஜன்,ஏ.ஐ.டி.யூ.சிமாவட்ட செயலாளர் சுரேஷ்,ஐ.என்.டி.யு.சி மாவட்ட தலைவர் வெங்கட் நாராய ணன், எச்.எம்.எஸ். மாநில செயலாளர் ஜான்சன், ஏ.ஐ.சி.சி.டி.யு  மாவட்ட செய லாளர் அருண், எல்.டி.யூ.சி.மாவட்ட செயலாளர் கார்த்திக், எல்.எல்.எப் மாவட்ட செயலாளர் தெய்வீகன். சிஐடியு மாவட்ட தலைவர் சீனிவா சன், ஏ.ஐ.டி .யு.சி மாவட்ட தலைவர் நட ராஜா. தொமுச தலைவர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இதில் அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள். அறைகூவலின் படி ஆகஸ்ட்  10 சனிக்கிழமை காலை  தலைமை தபால் நிலையம் முன்பு தேசிய கொடியேந்தி . நாசகர 3 குற்ற வியல் சட்டங்களின் நகலை எரித்து எதிர்ப்பை பதிவு செய்வது ஆகஸ்ட் 12 திங்கள் மாலை 4 மணியிலிருந்து 8 மணிவரை ஸ்ரீரங்கம். இந்திரா காந்தி காலேஜ், தென்னூர் அரசமரத்தடி, பீம நகர் பகுதியில் துண்டுப் பிரசுரம் வழங்கி பரப்புரை செய்வது,ஆகஸ்ட் 14  மாலை 6மணிக்கு உறையூர் குறத் தெருவில். விடியலை நோக்கி விடு தலை நாள் நினைவுகள் கலைநிகழ்ச்சி யுடன் கூட்டம் நடத்துவது என முடிவு  செய்யப்பட்டது.