தஞ்சாவூர், ஜூன் 13- தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உரிமை கோரப் படாத 26 உடல்கள் ஒரே நாளில் அடக்கம் செய்யப்பட்டன. தஞ்சாவூர் மாவட்ட காவல் சரகம் முழுவதிலும் இருந்து ஆங்காங்கே ஆதர வின்றி, உடல் நலிவுற்று உயிரிழந்து கிடந்த உடல்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டு, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கும் நோக்கத்தோடு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை பிரேதக் கிடங்கில் கடந்த சில மாதங் களாக வைக்கப்பட்டிருந்தது. உடலை உரிமை கோரி யாரும் வராத, அந்த உடல்களும் பிரேத கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து உரிமை கோராத உடல்களை அடக்கம் செய்ய மருத்துவக் கல்லூரி நிர்வாகம், காவல் துறையிடம் கேட்டுக் கொண்டது. அதன்படி 26 உடல்களை அடக்கம் செய்ய ‘நேசக்கரம்’ என்ற தன்னார்வ அமைப்பு முன்வந்தது. இதையடுத்து திங்கள்கிழமை 26 உடல்களும் தஞ்சாவூர் ராஜாகோரி சுடுகாட்டுக்கு கொண்டு செல் லப்பட்டு, அங்கு மாநகராட்சி சார்பில் பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு ஒரே இடத்தில் 26 உடல்களும் அடக்கம் செய்யப்பட்டன. தொடர்ந்து உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தில் மலர் பரப்பி, குடும்ப உறுப்பி னர் ஒருவர் இறக்கும் போது செய்கிற அனைத்து சடங்குகளையும் செய்து முடித்தனர். இதுகுறித்து தன்னார்வ அமைப்பி னர் கூறுகையில், “ஆதரவற்ற உடல்கள் என்பது வாழ்வின் கொடுமை. அதனை அடக்கம் செய்வது சமூகக் கடமை என்ற நோக்கத்தோடு, நேசக்கரம் அமைப்பி னர், தொடர்ச்சியாக ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்யும் பணியை கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று காலக் கட்டத்தில் இருந்து செய்து வருகிறோம். இதுவரை 350-க்கும் மேற்பட்ட உடல்களை அடக்கம் செய்துள்ளோம். இப்பணிக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் காவல் துறை அதிகாரிகளும், மாநகராட்சி அதி காரிகளும் நல்ல ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்” என்றனர்.