districts

திருச்சி முக்கிய செய்திகள்

நெற்பயிருக்கு ரூ.23.79 கோடி இழப்பீடு பெறப்பட்டுள்ளது புதுகை ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை, மார்ச் 2- புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவம் தவறி 3 நாட்கள் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ரூ.23.79 கோடி இழப்பீடு பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் அவர் பேசுகையில், ‘‘புதுக்கோட்டை மாவட்டத்தில் பிப்ரவரி முதல் வாரத்தில் 3 நாட்கள் பருவம் தவறி பெய்த மழையால் பயிர்கள் சேதமடைந்தன. இதுகுறித்து நடத்தப்பட்ட கணக்கெ டுப்பில், மாவட்டம் முழுவதும் 11,190 ஹெக்டேர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதும், 1.645 ஹெக்டேர் பருப்புகள், 7.645 ஹெக்டேர் எண்ணெய் வித்துகள் சேதமடைந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவற்றுக்கான கணக்கீடுகள் முடித்து, நெற்பயிர்களுக்கு ரூ.23.79 கோடியும், பருப்பு வகைகளுக்கு ரூ.4,935, எண்ணெய் வித்துகளுக்கு ரூ.22,935 இழப்பீடு உறுதி செய்யப்பட்டு பெறப் பட்டுள்ளது. இந்தத் தொகை விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்’’ என்றார். 

மாணவிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டு சிறை 

தஞ்சாவூர், மார்ச் 2-  தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடு அடுத்த புலவன் காடு கீழத்தெருவை சேர்ந்தவர் சுப்பையன் (69). விவசாயி. இவர் கடந்த ஆண்டு 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தாய் சென்று கேட்டபோது அவரையும் சுப்பையன் தாக்கி உள்ளார்.  இதுகுறித்து மாணவியின் தாய் பாப்பாநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் இளங்கோவன் வழக்கு பதிவு செய்து சுப்பையனை கைது செய்து விசாரணை நடத்தினார்.  இது தொடர்பான வழக்கு தஞ்சை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி சுந்தர் ராஜன் விசாரித்து, சுப்பையனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்ப ளித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டார்.

வாழ்வில் திறன் பயிற்சி 

அறந்தாங்கி. மார்ச்.2.  புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்திற்குட்பட்ட புதிய பாரத தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி யினை மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் இந்தி ராணி தலைமையில் தொடங்கியது.  மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ)சிவயோகம், புதுக்கோட்டை மாவட்ட கவுன்சிலர் நஜீம் முதீன், மருத்துவர் கோமதி உள்ளிட்டோர் பங்கேற்ற னர். பயிற்சியில் 36 தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.

தனியார் பேருந்து நிறுவன முதலீடு மோசடி: மேலாளர் கைது

தஞ்சாவூர், மார்ச்.2 -  தஞ்சாவூரில் ராஹத் டிரான்ஸ்போர்ட் என்கிற தனியார் பேருந்து நிறுவனத்தில் முதலீடு செய்த முத லீட்டாளர்களின் பல கோடி ரூபாய் முதலீடுகளை நிறுவன உரிமையாளர் கமாலுதீன் பெற்று கொண்டு, நிறைய லாபம் கொடுப்பதாகக் கூறி ரூ.400 கோடிக்கு மோசடி செய்ததாகக் காவல் துறையில் 6,380 பேர் புகார் அளித்தனர். இதுகுறித்து, திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்  பிரிவினர் 2021-ஆம் ஆண்டில் வழக்கு பதிந்து விசா ரணை மேற்கொண்டு வந்தனர். இதில் கமாலுதீன் ஹாரீஸ் கோச் பஸ் பாடி பில்டர்ஸ் என்ற நிறுவனத்தை மேலாளர் பி.வடிவேலை (36) நியமித்து நடத்தி வந்தார்.  இதில், கமாலுதீனுடன், வடிவேல் சேர்ந்து மோசடி யாக லாபம் அடைந்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த வடி வேலை காவல் துறையினர் தேடி வந்தனர்.  இந்நிலையில், கரூர் தான்தோன்றிமலையில் இருந்த வடிவேலை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் மட்டுமே இந்தியாவை காப்பாற்ற முடியும்  சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேச்சு

புதுக்கோட்டை, மார்ச் 2-  மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் இந்தியாவைக் காப்பாற்ற முடியும் என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-ஆவது பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் மார்ச் 1-ஆம் தேதி பிறந்த 23 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வியாழக்கிழமை அணிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல், தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் 22 மாத கால ஆட்சிக்கு கிடைத்த பெரிய வெற்றியாகும்.  அதிமுகவை பாஜகவுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு தான் தேர்தலில் நிற்கிறார்கள். அவர்களைப் பற்றி நாங்கள் விமர்சனம் செய்யத் தயாராக இல்லை.  நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவோம் என்று தான் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார், இதற்காக ஒத்த கருத்துடைய அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும். மத்தியில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்தால் தான் இந்தியாவைக் காப்பாற்ற முடியும்’’ என்றார்.

ஊராட்சிகளில் நீல நிற அட்டை:  மாற்றுத்திறனாளிகள் பெறலாம் மாவட்ட ஆட்சியர் தகவல்

திருவாரூர், மார்ச் 2-  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செயற்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பிரத்யேக நீல நிறம் கொண்ட வேலை அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் மார்ச் 10-ஆம் தேதி வரை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.  முகாமினை பயன்படுத்தி தாங்கள் வசிக்கும் பகுதியைச் சார்ந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் நீல நிற வேலை அட்டையினை பெற்று கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

ஜனநாயகப் போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பதா? காவல்துறைக்கு சிபிஎம் கண்டனம்

புதுக்கோட்டை, மார்ச்.  2-  அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள ஜனநாயகப் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு கூட்டம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.  கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாகராஜன், எம்.சின்னதுரை எம்எல்ஏ ஆகியோர் பேசினர். மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் விளக்கிப் பேசினார். பின்னர் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்து சொல்லும் உரிமை போன்றவைகள் அரசியல் சாசன சட்டம் பொதுமக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள்.  இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு ஜனநாயக இயக்கங்கள் பொதுமக்களிடம் தங்களின் கருத்துக்களை எடுத்துச் செல்வதற்கும், அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்கும் ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை நடத்துவதும் அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் ஆகும். புதுக்கோட்டை நகரில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சின்னப்பா பூங்கா, திலகர் திடல் ஆகிய பகுதிகளை காவல்துறை மேற்படி போராட்டங்களுக்கு அனுமதித்து வந்தது. அரசியல் கட்சிகள் மற்றும்  இயக்கங்கள் மேற்படி இடங்களுக்கு விண்ணப்பிக்கும்போது காவல்துறை அனுமதியும், பாதுகாப்பும் வழங்கி வந்தனர். ஆனால், சமீப காலமாக திலகர்திடலைத் தவிர மற்ற இடங்களில் அனுமதி மறுத்து காவல்துறையினர் அராஜகமான முறையில் அடம்பிடித்து வருகின்றனர். போக்கு வரத்திற்கும், பொதுமக்களுக்கும் எந்தவித இடையூறும் இல்லாமலேயே போராட்டங்கள் கடந்த காலங்களில் நடந்துவந்தது. சட்டம்-ஒழுங்கு கெடும் வகையில் இதுநாள் வரை அங்கு எந்தவிதமான சம்பவங்களும் நடந்ததில்லை. ஆனால், தற்பொழுது திலகர் திடலைத்தவிர மற்ற பகுதிகளில் அனுமதிக்க மாட்டோம் என்று சொல்வதன் மர்மம் என்ன? திலகர்திடல் என்பது ஆட்கள் நடமாட்டமே இல்லாத பகுதி. அந்த இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதால் எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை. சமீப காலமாக புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையின் செயல்பாடு தமிழக  அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே உள்ளதாக நாங்கள் கருதுகிறோம். காவல்துறையினரின் இத்தகைய நடவடிக்கைகள் திராவிட மாடலுக்கு முற்றிலும் எதிரான செயலாகும். புதிய பேருந்து நிலையம், அண்ணாசிலை, சின்னப்பா  பூங்கா ஆகிய பகுதிகளில் ஜனநாயகப்போராட்டங்களுக்கு அனுமதி அளிக்க முடியாது என  காவல்துறையின் செயல்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இது ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் செயலாகும். எனவே, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இதில் உடனடியாக தலையிட வேண்டும். மேற்படி இடங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநயாக இயக்கங்கள் நடத்தும் ஜனனநாயகப் போராட்டத்திற்கு அனுமதி அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறுகளின் கரைகளை பலப்படுத்துக!

அரசுக்கு சிபிஎம் கோரிக்கை

திருவாரூர், மார்ச் 2-  திருவாரூர் மாவட்டத்தில் உள்ள  அனைத்து ஆறுகளின் கரைப்பகுதி களை பலப்படுத்தும் வகையில் ரிவிட்மெண்ட் கட்ட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுவித்துள்ளது.  இதுதொடர்பாக கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில், ‘‘கடந்த 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு நீர்நிலை யை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆறுகளை பாது காக்க, ஆற்றின் உடைப்பு பகுதிகளை கண்டறிந்து ஆற்றின் இரு கரைகளிலும் ரிவிட்மெண்ட் கட்டும் பணி கடந்த காலங்களில் இருந்தது.  ஆனால் நாகரீகத்தின் உச்சமாக நீர் நிலையை பாதுகாக்க தவறியதால் இயற்கையாக நடைபெற்று வந்த  பல்வேறு நீர் ஆதாரங்கள் காக்கும் நடைமுறை தற்போது இல்லை. பல்வேறு பருவநிலை மாற்றம் காரண மாக ஆண்டு தோறும் பெய்யும் பருவ மழையின் சீராக பொழிவதில்லை பல்வேறு காலங்களில்  திடீர் மழை பெய்கிறது. இதனால் விவசாயிகள் பெரும் துன்பத்திற்கு ஆளாகும் நிலை உள்ளது.  அரசின் திட்டமே விவசாயிகளை பாதுகாக்கும் தமிழ்நாடு அரசு விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் விவசாயி களுக்கு என்று தனி பட்ஜெட் அறிவித்து நடைமுறைபடுத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை வாயி லாக கிடைக்கும் மழை நீர் ஆற்றுப் படுகை வாயிலாக வாய்க்கால் மற்றும் குளம், குட்டை என நிறைந்து பின்னர் டெல்டாவின் காவிரி கடைமடை பகுதியான கடற்கரை முகத்துவா ரத்தில் இறுதியாக சென்றடையும். மேலும் விவசாயிகளுக்கு இந்த திட்டத்தினால் ஆற்றுப் பாசன நீர் சேதா ரம் ஆகாமல் செல்வதால் அனைத்து இடங்களிலும் நீர் நிலைகள் கூடுத லாக பாதுகாக்கப்படும். காவிரியின்  கடைமடை பகுதியான முகத்துவாரங் களில் உப்பு நீர் நன்னீர் நிலங்களில் புகாமல் தடுக்க வாய்ப்பு உள்ளது. மேலும் ஆண்டுதோறும் தூர்வாரும் பணிக்காக பல கோடி ரூபாய் செலவு செய்தும், தூர்வாரும் பணி விவ சாயிகள் எதிர்பார்த்த அளவு பயனின்றி உள்ளது.  எனவே, தமிழ்நாடு அரசு இத்திட்டத்திற்கு வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி, ஆற்றின் இரு கரைகளி லும் ரிவிட்மெண்ட் கட்ட வேண்டும், ஆறுகளில் நீர் தடுப்பணை கட்ட உரிய நடவடிக்கை வேண்டும்.  இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.