districts

img

100 நாள் திட்டத்தில் 20,073 வீடுகள் கேரள முதல்வர் ஒப்படைத்தார்

திருவனந்தபுரம், மே 5-

    கேரள அரசின் இரண்டாம் ஆண்டு நிறை வையொட்டி 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் கொல்லம் கொற்றங்கரா மேக்கோணில் கட்டி முடிக் கப்பட்ட 20,073 வீடுகளுக் கான சாவியை முதல்வர் பினராயி விஜயன் வழங்கி னார். வியாழனன்று மாலை  நடந்த விழாவில் 41,439 பய னாளிகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தான அறி விப்பையும் முதல்வர் வெளி யிட்டார். இதன் மூலம், லைஃப் திட்டத்தில் இது வரை கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 3,42,156 ஆக உயர்ந்துள்ளது.

   மனசோடித்திரி (மன தார சிறிதளவு) மண்  பிரச்சா ரத்தின் மூலம் நிலமற்ற வீடற்றவர்களை மீள்குடி யேற்றுவதற்கு 23.50 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இதில் 12.32 ஏக்கர் நிலம் பதிவு செய்யப்பட்டு பயனா ளிகளிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. நிலமற்ற வீடற்ற 1000 குடும்பங்களுக்கு நிலம் வாங்க அதிகபட்சமாக ரூ.2.5 லட்சம் வீதம் ரூ.25 கோடி நிதியுதவி வழங்க அரசுடன் சிற்றிலப்பிள்ளி அறக்கட்டளை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டுள்ளது.

  லைப் - 2020 பயனாளி கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள 3,69,262 நிலம் கொண்ட வீடற்றோரில், பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் மீன வர்களுக்குப் பலன்களை விரைவுபடுத்த அரசு முன் மொழிந்துள்ளது. இதைய டுத்து 46,380 பயனாளிகள் வீடு கட்டுவதற்கான ஒப்பந் த்தில் கையெழுத்திட்டனர். இதில் 587 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன மிகவும் ஏழைகள் பட்டியலில் இடம் பெற்ற வீடுகள் தேவை ப்படும் 8058 பேரில் 2358 பேர் ஒப்பந்தம் செய்து 47 பேர் வீடுகளை கட்டி முடித்துள்ளனர்.

   ஏற்கனவே, 100 நாள் வேலை திட்டத்தின் ஒரு பகுதியாக, நான்கு வாழ்வா தார குடியிருப்பு வளாகங்க ளை முதல்வர் திறந்து வைத்தார். இது தவிர, 25 குடி யிருப்பு வளாகங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. எர்ணாகுளம் நெல்லிக்குழி, திருவனந்தபுரம் பூவச்சல் ஊராட்சிகளில் புதிய குடியிருப்பு வளாகங்கள் கட்ட முடிவு செய்யப் பட்டுள்ளது. விழாவிற்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எம்.பி.ராஜேஷ் தலைமை வகித்தார்.

 வீடற்ற கேரளாவை நோக்கிய முன்னேற்றம்:

  முதல்வர் பினராயி விஜயன் முன்னதாக தனது  முகநூல் பதிவில், ‘வியா ழன் அன்று ஒப்படைக் கப்படும் 20,073 வீடுகள், வீடற்ற, அழகான கேரளா என்ற அரசின் அறிவிக்கப் பட்ட கொள்கைக்கான ஒரு பெரிய முன்னெடுப்பு என்று கூறியுள்ளார். பாதுகாப்பான வீடு என்பது ஒவ்வொரு மனிதனின் உரிமை. அது தரும் பாதுகாப்பு உணர்வும் நம்பிக்கையும் கொஞ்ச மல்ல. கேரளாவை அனை வரும் திருப்தியுடன் வாழும் நாடாக மாற்ற எல்.டி.எப்  அரசு வளர்ச்சித் திட்டங்க ளை வகுத்து செயல்படுத்தி வருவதாகவும் முதல்வர் முகநூலில் எழுதியுள்ளார்.