districts

திருச்சி முக்கிய செய்திகள்

இருவேறு விபத்துகளில்  மூதாட்டி உட்பட 2 பேர் பலி

.கே.நகரை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி காமாட்சி (27). இவர் தனது  உறவினர் வள்ளி (70) என்பவருடன் திருச்சி ஒத்தக்கடை யில் இருந்து டி.வி.எஸ். டோல்கேட் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.  தலைமை தபால் நிலையம் காந்தி சிலை அருகே சென்றபோது அடையாளம் தெரியாத பேருந்து இவர் மீது மோதியது. இதில் மூதாட்டி வள்ளி படு காயம் அடைந்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்  காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து திருச்சி போக்குவரத்து புலனாய்வு பிரிவு தெற்கு  காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு விபத்து திருச்சி மாவட்டம் மண்ணிச்சநல்லூர் அருகே உள்ள வடக்கு ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது  மகன் ஹரிகிருஷ்ணன் (25). லாரி கிளீனரான இவர் திருச்சி பழைய பால்பண்ணை அருகில் லாரியில் சென்று  கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில், காயமடைந்த அவருக்கு திருச்சி  அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஹரி கிருஷ்ணன் உயிரிழந்தார்.

திருவிழா நடத்த தடை திருச்சி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

திருச்சிராப்பள்ளி, பிப்.20- திருச்சி மாவட்டம் லால்குடி அன்பில் கிராமத்தில் ஆச்சிராம வள்ளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அந்த பகுதியை சுற்றியுள்ள ஜங்கம ராஜபுரம், மங்கம்மாள்புரம், கீழ அன்பில் ஆகிய மூன்று கிராமங்களை சேர்ந்த மக்கள் வழிபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், இந்த ஆண்டிற்கான திருவிழாவிற்கு உதவி ஆட்சியர் அனுமதி மறுத்துள்ளார். இதைத் தொடர்ந்து கிராம மக்கள் திங்களன்று திருச்சி மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.'

மூதாட்டி மாயம்

திருச்சிராப்பள்ளி, பிப்.20- திண்டுக்கல் நாகல் நகர் திருமலைசாமிபுரத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி மாரி கண்ணு (60). இவரது மகள் வீடு திருச்சி சோமரசம்பேட்டையில் உள்ளது.  திண்டுக்கல்லில் இருந்து திருச்சி மத்திய பேருந்த நிலையம் வந்த மாரிகண்ணு மகள் வீட்டிற்கு ஆட்டோ வில் செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்ப வில்லை.  இதுகுறித்து அவரது மகன் ஆறுமுகம் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுத் தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிந்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்தில் நகைகளுடன் 2 பேர் சிக்கினர்

திருச்சிராப்பள்ளி, பிப்.20- திருச்சி விமான நிலையம் பகுதியில் காவல்துறை யினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விமான நிலைய பேருந்து நிறுத்தம் மற்றும் வயர்லெஸ் ரோடு சந்திப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற  இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.  அவர்களிடம் உரிய ஆவணங்களின்றி நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் சிவகங்கை தேவ கோட்டையைச் சேர்ந்த ஜீவகன் என்பவரிடம் வளை யல்கள், தங்க செயின், மோதிரம் உள்பட 78 கிராம்  தங்க நகைகளும், திருச்சி பெரிய கடை வீதியைச் சேர்ந்த  அப்துல் ரகுமான் என்பவரிடம் 180 கிராம் மதிப்புள்ள தங்கச் செயினும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை  பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்களை கைது  செய்தனர். பின்னர் அவர்களை ஜாமீனில் விடுவித்தனர்.

வாலிபர் தற்கொலை

திருச்சிராப்பள்ளி, பிப்.20- திருச்சி அருகே உள்ள பெட்டவாய்த்தலை எல்லக் கரை தேவஸ்தானம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுரு நாதன். இவரது மகன் இளைய பாரதி (25).  இவர் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி  வந்தாக கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்த அவ ரது தந்தை சிவகுருநாதன் மகனை கண்டித்தார். இதனால், மனம் உடைந்த இளையபாரதி, காந்தி புரம் பகுதியில் உள்ள செல்வம் என்பவரது விவசாயத் தோட்டத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றச் சம்பவங்களை வாட்ஸப் மூலம்  தெரிவித்தால் நடவடிக்கை கும்பகோணம் டிஎஸ்பி மகேஷ் குமார் தகவல்

கும்பகோணம், பிப்.20- கும்பகோணத்திற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல்  துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் செய்தியா ளர்களை சந்தித்து பேசினார் அப்போது காவல்துறையும் ஊடகமும் இணைந்து  செயல்பட்டால் குற்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பில்லா மல் போகும் அதற்கு ஊடகத்துறையினர் பொதுமக்கள் நலன் கருதி உதவிட வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். மேலும் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் உட்கோட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற  சம்பவங்கள் சட்ட விரோத செயல்கள் மற்றும் பொது மக்களை அச்சுறுத்தும் குற்றவாளிகள் ஏதேனும் பொது மக்களுக்கு இடையூறாகவோ குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டாலோ சந்தேகப்படும்படி புதிய நபர்கள் நட மாட்டம் இருந்தாலோ 9498234785 என்ற வாட்ஸ் நம்ப ருக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மயிலாடுதுறை கொடியம்பாளையம் சுற்றுத்தலமாகிறது

மயிலாடுதுறை, பிப்.20- கொள்ளிடம் அருகே கொடியம்பாளை யம் தீவு கிராமத்தை சுற்றுலா தல மாக்கும் திட்டத்தை அதிகாரிகள் ஆய்வு  செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடற்கரை கிராமங்க ளான பழையாறு, கோட்டைமேடு, கொடி யம்பாளையம் ஆகிய கிராமங்கள் உள் ளன. இந்த கிராமங்கள் வங்கக்கடலோரம் அமைந்துள்ளன. இப்பகுதி மக்கள் பெரும்பாலும் மீன்பிடித் தொழிலையே நம்பி உள்ளனர். இப்பகுதியில் இயற்கை  மீன் பிடித்துறைமுகம் அமைந்துள்ளது. கொள்ளிடம் ஆறு கொடியம்பாளையம் மற்றும் பழையாறு கடற்கரைக்கு இடைப்  பட்ட முகத்துவார பகுதியில் வங்கக்கட லோடு கலக்கிறது. அலையாத்திக்காடு கொள்ளிடம் ஆறு கலக்கும் பகுதி அருகே  திட்டுப்பகுதிகள் நிறைந்துள்ளன.  அதில்  ஒரு திட்டுப்பகுதிதான் கொடியம்பாளை யம் தீவு கடற்கரை கிராமம்.  இந்தக் கிராமம் ஒருபக்கம் வங்கக்கட லாலும், மறுபக்கம் கொள்ளிடம் ஆறாலும்  சூழப்பட்டுள்ளது. இந்தக் கிராமத்தைச் சுற்  றிலும் அலையாத்திக்காடு பசுமை நிறைந்து காணப்படுகிறது.   கொடியம்பாளையம் தீவுக் கிராமம் அருகே உள்ள கோட்டைமேடு கிரா மத்தில் சோழ மன்னரின் சாம்ராஜ்யம் சரிந்து போனதற்கான அடையாளங்கள் எஞ்சி  உள்ளன. இந்த நிலையில் கொடியம்பாளை யம் தீவு கிராமத்தை சுற்றுலாத் தலமாக்  கும் திட்டம் குறித்து மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரி அரவிந்த்குமார் தலைமை யிலான சுற்றுலாத்துறை அதிகாரிகள் கொடியம்பாளையம் மற்றும் கோட்டை மேடு ஆகிய தீவு கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.  சுற்றுலா வசதிகள் அப்போது அங்கு உள்ள மணற்பாங்கான கடற்கரை, படகு  குழாம், காத்திருப்போர் கட்டிடம், சாலை  வசதிகள், சிறுவர்களுக்கான விளை யாட்டு பூங்கா மற்றும் கழிவறைகள் உள் ளிட்ட சுற்றுலா வசதிகள் அமைப்பது தொடர்  பாக தொடர்புடைய துறை அலுவலர் களுக்கு ஆலோசனை வழங்கினர்.  கெள்ளிடம் ஆற்றில் உள்ள தீவு கிரா மங்களை சுற்றுலா தலமாக மேம்படுத்தும் பணி விரைவில் நடைபெறும் என்று  சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்த னர். ஆய்வின்போது ஒன்றியக்குழு தலை வர் ஜெயப்பிரகாஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, ஒன்றியக் கவுன்  சிலர் அங்குதன், ஊராட்சித் தலைவர் காம ராஜ், சுற்றுலா அலுவலர் பாலமுரளி, வரு வாய் ஆய்வாளர் மருதுபாண்டியன், கிராம நிர்வாக அலுவலர்கள் பவளச்சந்திரன், அன்பரசன், செல்லத்துரை மற்றும் பலர் வந்திருந்தனர்.

வாய்க்காலை தூர்வாரி நோய் தொற்றை தடுத்திடுக! மாநகராட்சி ஆணையரிடம் சிபிஎம் மனு

திருச்சிராப்பள்ளி, பிப்.20- திருச்சி மாநகராட்சி கூட்டரங்கில் மாநகராட்சி ஆணை யர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்களன்று நடைபெற்றது.  கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மலைக்  கோட்டை பகுதி செயலாளர் லெனின் மாநகராட்சி ஆணை யரிடம் மனு அளித்தார்.  அந்த மனுவில், ‘‘திருச்சி மாநகராட்சி 17-ஆவது வார்டுக்குஉட்பட்ட அண்ணாநகர் விரிவாக்க பகுதியில்  கழிவுநீர் வடிகால் முறையாக கட்டப்படாமல், புதிதாக   சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில்  கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் ஏற்க னவே உள்ள பெரிய வாய்க்காலும் தூர்வாரப்படாததால் அடைப்பு ஏற்பட்டு கொசுகளின் உற்பத்தி பெருகி நோய்  தொற்று ஏற்படும் நிலை உள்ளது.   எனவே இந்த பகுதியில் சாக்கடை வசதி மற்றும் வாய்க்காலை தூர்வாரி தொற்றுநோய் பரவுவதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என மனுவில் கூறியிருந்தார்.  ஆணையரிடம் மனுவை கொடுத்தபோது கிளை செயலாளர்கள் பழனிவேல், சின்னதுரை ஆகியோர் உடனிருந்தனர்.

கஞ்சா கடத்திய விஏஓ இடைநீக்கம்

புதுக்கோட்டை, பிப்.20-  புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக்கோட்டை அருகே காரில் 1.200 கிலோ கஞ்சா கடத்தியதாக கைது  செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலரை, வருவாய்க் கோட்டாட்சியர் முருகேசன் பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக்கோட்டை அருகே காரில் 1.200 கிலோ கஞ்சா கடத்தியதாக, கோவி லூர் கிராம நிர்வாக அலுவலர் ஜெயரவி வர்மா உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது  செய்தனர். இதனைத் தொடர்ந்து ஜெயரவி வர்மாவை  பணியிடை நீக்கம் செய்து, புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் முருகேசன் திங்கள்கிழமை உத்தர விட்டுள்ளார்.

விருது பெற திருநங்கையர் விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, பிப்.20-  தமிழ்நாடு அரசு திருநங்கை தினமான ஏப்ரல் 15ஆம் தேதியன்று ஒவ்வொரு ஆண்டும் திருநங்கையருக்கு  முன்மாதிரி சிறப்பு விருதான ரூ.1 லட்சம் காசோலை மற்றும் சான்று வழங்கப்பட்டு வருகிறது.    திருநங்கையர்கள் சமுதாயத்தில் சந்திக்கும் எதிர்ப்பு களை மீறி தங்களுடைய முயற்சியில் படித்து, தனித்திற மையை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி யவர்களுக்கு முன்மாதிரி விருது வழங்கப்பட்டு வரு கிறது.  புதுக்கோட்டை மாவட்டத்தில் இவ்விருதினை பெறு வதற்கு தகுதியுடைய திருநங்கைகள் www.awards.tn.gov.in என்ற இணையதள வாயிலாக பிப்ரவரி 28-க்குள் விண்ணப்பிக்கலாம்.  மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி எண்ணை (04322-222270) தொடர்பு கொள்ளு மாறு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

அரிலூரில் இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

அரியலூர், பிப்.20- அரியலூர் ராஜாஜி நகரிலுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக, செயற்பொறியாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.21)ஆம் தேதி காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. பெரம்பலூர் மேற்பார்வையாளர் தலைமையில் நடை பெறும் கூட்டத்தில், மின் நுகர்வோர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்துக் கொண்டு தங்க ளது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயனடைய லாம் என்று ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

மின்கம்பி உரசியதால் தீ விபத்து: அறுவடை நெல் பயிர்கள் சேதம் 

அரியலூர், பிப்.20- அரியலூர் மாவட்டம் தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (52). இவர் தனக்கு  சொந்தமான வயலில் நெல் சாகுபடி செய்து, அறுவ டைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில், இவரின்  வயலின் குறுக்கே சென்ற உயர் அழுத்த மின் கம்பி ஒன்றோடு ஒன்று உரசியதில் ஏற்பட்ட தீ விபத்தில் வயலில் தீ பரவியது. இதனால், அறுவடைக்கு தயார்நிலையில் இருந்த நெல் பயிர்கள் முழுவதும் எரிந்து நாசமாகின. 

வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகை  முதன்மையாக தமிழில் இருக்க வேண்டும்

தொழிலாளர் துறை உதவி இயக்குநர் அறிவுறுத்தல்

புதுக்கோட்டை, பிப்.20-  புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வகையான வணிக நிறுவனங்கள்  மற்றும் கடைகளின் பெயர்ப் பலகைகள் முதன்மையாக தமிழில் இருக்க வேண்டும் என தொழிலாளர் துறை உதவி இயக்குநர் இ.வெங்கடேசன் அறிவுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘தமிழ்  நாட்டிலுள்ள அனைத்து வணிக நிறுவனங் கள் மற்றும் கடைகளின் பெயர்ப் பலகை கள் எப்படி இருக்க வேண்டும் என அரசாணை கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. இவற்றின்படி, பெயர்ப் பலகையின் பிரதான மாக (5:3:2 விகிதத்தில்) தமிழிலும், அடுத்தபடி யாக ஆங்கிலமும், மூன்றாவது நிலையில் உரிமையாளர் விரும்பும் மொழியும் இருக்க லாம். இந்த விதியின்படி, புதுக்கோட்டை மாவட்  டத்திலுள்ள அனைத்து வணிக நிறுவனங்கள்  மற்றும் கடைகளின் பெயர்ப் பலகைகள் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத நிறு வனங்களின் பெயர்ப் பலகையை பிப்ரவரி 25-ம் தேதிக்குள் மாற்ற வேண்டும். மாற் றப்படாத நிறுவனங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறி யுள்ளார்.