மயிலாடுதுறை, மார்ச்.17- மயிலாடுதுறை மாவட்டம்,செம்பனார் கோவில் அருகிலுள்ள பரசலூர் நல்லாடை மெயின்ரோட்டில் குறைந்த மின்அழுத் தத்தை போக்க 2 புதிய மின்மாற்றிகள் அமைக் கப்பட்டு வியாழனன்று செயல்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது. விழாவிற்கு பரசலூர் ஊராட்சி தலைவர் த.சண்முகம் தலைமை வகித்தார். மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் (சீர்காழி) லதா மகேஸ்வரி, செம்பனார்கோவில் உதவி செயற்பொறியாளர்கள் விஸ்வநாதன், அப்துல் வஹாப், ஊராட்சி செயலர் நாகராஜ் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.