districts

மோட்டார் சைக்கிள்  திருடிய 2 பேர் கைது

திருச்சிராப்பள்ளி, ஏப்.28- திருச்சி சங்கிலியாண்டபுரம் வள்ளு வர் நகரைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன் மகேந்திரன் (38). இவர் தனது வீட்டுப் பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார்.  பின்னர் வந்து பார்த்தபோது வாக னத்தை காணவில்லை. இதுகுறித்து மகேந்திரன் பாலக்கரை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிந்து குற்றவாளி களை தேடி வந்தார்.  இந்நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை ஆர்.டி.மலையைச் சேர்ந்த விஜயகுமார் (23), கரூர் மாவட்டம் குளித்தலை ஆர்.டி.மலையைச் சேர்ந்த சக்திவேல் (40) ஆகிய 2 பேரை  சந்தே கத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல்  செய்யப்பட்டது.

;