districts

img

தமிழ் இலக்கிய மன்ற முதலாம் தமிழ்க் கூடல் விழா

தமிழ் இலக்கிய மன்ற முதலாம் தமிழ்க் கூடல் விழா  பாபநாசம் : பாபநாசம் அருகே சுந்தரப் பெருமாள் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி யில் தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில் முதலாம் தமிழ்க் கூடல் விழா நடைபெற்றது.  விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் மணிவண்ணன் தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர் சச்சிதானந்தம் முன்னிலை வகித்தார். முன்னதாக, முதுகலை ஆசிரியர் சுபாஷினி வரவேற்றார். கற்றல் நன்றே என்ற தலைப்பில் முனைவர் பாஸ்கர் பேசினார். முதுகலை ஆசிரியர் கமலஹாசன் நிகழ்ச்சியை தொகுத்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஆசிரியர்கள்,  மாணவர்கள் கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.