districts

img

தஞ்சையில் 18 புதிய கட்டடங்கள்: அமைச்சர் அன்பில் மகேஸ் திறப்பு

தஞ்சாவூர், செப்.11-  தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு துறை  சார்ந்த 18 புதிய அரசு கட்டடங்களை, மாவட்ட  ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திங்கள்கிழமை திறந்து வைத்தார்.  பூதலூர் வட்டம் கோவிலடி ஊராட்சி யில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்  புதிய வகுப்பறை கட்டிடம், திருக்காட்டுப் பள்ளி ஊராட்சியில், துணை வேளாண்மை விரிவாக்க அலுவலகம், தஞ்சாவூர் ஊராட்சி  பாலோபநந்தவனம் பொன்னி நகர், மாரி யம்மன் கோவில் கரம்பை காந்தி தெரு, நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மாதாகோட்டை ஆகிய இடங்களில் பொது விநியோக அங்காடி கட்டிடம், குருங்குளம் ஊராட்சி தோழகிரிப்பட்டி பள்ளி வகுப்பறை கட்டிடம், ஒரத்தநாடு வட்டம் ஈச்சங்கோட்டை புதிய  பஞ்சாயத்து அலுவலக கட்டிடம், பட்டுக் கோட்டை வட்டம் கரம்பயம் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடம் என மொத்தம் ரூ.298. 48 லட்சம் மதிப்பீட்டில் 18 புதிய கட்டிடங்களை  அமைச்சர் திறந்து வைத்தார்.  நிகழ்ச்சியில், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.சு.பழனிமாணிக்கம், சட்ட மன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன், டி.கே. ஜி.நீலமேகம், கா.அண்ணாதுரை, தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன்,  பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அக்பர் அலி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.