தஞ்சாவூர், ஜன.15 - தஞ்சாவூர் மாவட்டம் திருவையா றில் ஸத்குரு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் 178 ஆவது ஆராதனை விழாவினை, மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சி யர் பா.பிரியங்கா பங்கஜம், மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் தியாக பிரம்ம மஹோத்ஸவ சபா தலை வர் ஜி.கே.வாசன் ஆகியோர் முன்னி லையில் செவ்வாயன்று குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்த ஆராதனை விழா ஜன.14 முதல் ஜன.18 வரை நடைபெறுகிறது. ‘எந்தரோ மகானுபாவுலு’ அஞ்சல் அட்டை தொகுப்பு வெளியீடு தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்திய முக்கிய பிரமுகர்களின் படங்களை கொண்ட “எந்தரோ மகானு பாவுலு” என்ற தலைப்பில் ஒரு சிறப்பு அஞ்சல் அட்டை தொகுப்பை, திருச்சி ராப்பள்ளி மத்திய அஞ்சல் மண்டலத் தலைவர் த.நிர்மலாதேவி வெளி யிட்டார். இதனை, ஸ்ரீ தியாகரபிரம்ம மஹோத்சவ சபையின் தலைவரும், எம்.பி.,-யுமான ஜி.கே.வாசன் பெற்றுக் கொண்டார். இதுகுறித்து மத்திய அஞ்சல் மண்டல தலைவர் நிர்மலா தேவி கூறுகையில், “திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகத்தில் உள்ள அஞ்சல் தலை சேகரிப்பு நிலையத்தை தொடர்பு கொண்டும் இந்த தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம். இதன் விலை 350 ரூபாய்” என்றார். நிகழ்ச்சியில், திருச்சி மத்திய அஞ்சல் மண்டலத்தின் வணிகம் மற்றும் தொழில்நுட்ப உதவி இயக்குநர் கே. கலைவாணி, தஞ்சாவூர் கோட்ட முது நிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கு.தங்கமணி, தியாகராஜர் சபா அறங் காவலர் சுரேஷ் மூப்பனார் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.