districts

img

16-ஆவது தேசிய சாப்ட் டென்னிஸ் போட்டி சாதனை படைத்த மாணவி யாழினி

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற 16-ஆவது தேசிய சாப்ட் டென்னிஸ் போட்டியில், கரூர் பரணி வித்யாலயா பள்ளி மாணவி யாழினி சப்-ஜூனியர் பிரிவில் தமிழக அணியின் சார்பில் பங்கேற்று, 2 தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளிப்பதக்கம், ஒரு வெண்கலப்பதக்கம் என 4 பதக்கங்களை வென்று சாதனைப் படைத்தார். தேசிய அளவில் சாதனை படைத்த மாணவி யாழினியை பரணி வித்யாலயா பள்ளி தாளாளர் எஸ்.மோகனரங்கன், செயலர் பத்மாவதி மோகனரங்கன், முதன்மை முதல்வர் சி.ராமசுப்ரமணியன், முதல்வர் எஸ்.சுதாதேவி உள்ளிட்டோர் பாராட்டினர்.