districts

20 நாட்களில் ரூ.13.75 கோடிக்கு தேங்காய் கொப்பரை கொள்முதல்

தஞ்சாவூர், ஏப்.22-  

   தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடங் களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடங்கிய 20  நாட்களில் 424 விவசாயிகளிடமிருந்து, 1,267 டன் கொள் முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு ரூ.13.75 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

  தஞ்சாவூர் மாவட்ட விற்பனைக்குழுவின் கட்டுப் பாட்டில் இயங்கி வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடங் களான பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, கும்பகோணம் ஆகிய இடங்களில் கொப்பரை தேங்காய், ஒன்றிய  அரசின் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் ஏப்ரல்  1-ஆம் தேதி முதல் ஒரு கிலோ ரூ.108.60 என்ற விலையில், தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கமான நாஃபெட் மூலம் நாள்தோறும் கொள்முதல் செய்யப்பட்டு வரு கிறது.

  இதன்படி, ஒரத்தநாடு. பட்டுக்கோட்டை ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் வெள்ளிக்கிழமை மட்டும் 73  டன் கொப்பரை தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதை  பார்வையிட்ட தஞ்சாவூர் மாவட்ட விற்பனைக்குழு செய லாளர் மா.சரசு கூறுகையில்,  

   ‘‘தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 ஒழுங்குமுறை விற் பனை கூடங்களில் கடந்த 20 நாட்களில் 424 விவசாயி கள் 1,267 டன் கொப்பரை தேங்காயை ரூ.13.75 கோடிக்கு  விற்றுள்ளனர். இதற்கான தொகை விவசாயிகளின் வங்கி  கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

   மேலும், விவசாயிகள் தங்களது விளை பொருட் களை ஒழுங்குமுறை விற்பனைக் கூட கிடங்குகளில்  இருப்பு வைத்து, அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை 5  விழுக்காடு வட்டி விகித்தில் பொருளீட்டு கடன் பெறலாம். நடப்பாண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 57 விவசாயி களுக்கு ரூ.1.31 கோடி பொருளீட்டு கடன் வழங்கப் பட்டுள்ளது’’ என்றார்.