திருவாரூர், அக்.10- விவசாய தொழிலாளர் சங்கம், சிபிஎம் தலைவர்கள் தலைமையில் குடவாசல் வட்டார வளர்ச்சி அலுவலரி டம் 100 நாள் வேலை தொழிலாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர். திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம், மேலப்பாலையூர் ஊராட்சி கிரா மத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்த பயனாளிகளுக்கு 3-மாதமாக முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதைத்தொ டர்ந்து, குடவாசல் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வியாழக் கிழமை நேரில் வந்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு கூலித்தொகையை பெற்றுத் தருமாறு முறையிட்டனர். இதனை அடுத்து கட்சி அலுவல கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி குடவாசல் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முதல் கட்டமாக மனு அளிப்பது என்றும், கோ ரிக்கை நிறைவேறா விட்டால் போராட்டம் நடத்துவது என்றும் தெரிவித்தார். இதில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் டி. லெனின் பாரதி, சிஐடியு மாவட்ட நிர்வாகி கள் ஆறுமுகம், அம்பேத்கார் உள்ளிட் டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, குடவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் 100 நாள் தொழிலாளர்கள் தங்கள் கோ ரிக்கை மனுவாக அளித்தனர். கோரிக் கைகள் அனைத்தும் ஒரு வாரத்தில் நிறைவேறா விட்டால் போராட்டம் நடை பெறும் என தெரிவித்து கலைந்து சென்றனர்.