அரியலூர், ஜூலை 28 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண் டம் அருகில் உள்ள உட்கோட்டை தெற்கு வருவாய் கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான, மானாவாரி நிலப் பகுதியில் பாசன வசதி இல்லாததால், சில விவசாயிகள் தைலமரம் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்த தைல மரத்தோப்புகளுக்கு அருகில் சில தனியார் விவசாயிகள், அவர்களது வயல்வெளியில் பயன்ப டுத்துவதற்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து, அதற்கு தமிழக அரசின் இலவச மின்சாரத்தை பெற்றுள்ளனர். அந்த இலவச மின்சாரத்திற்கு செல் லும் மின்பாதை தைல மர தோப்பு வழி யாக செல்வதால் தைல மரங்கள் மின் கம்பிகளில் உரசி அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இந்த மின் பாதை அமைப்பதற்கு, சம்பந்தப் பட்ட விவசாய நிலத்திற்கு சொந்தக்கா ரர்களான தைலமர தோப்பு உரிமை யாளர்களிடம் மின்வாரியம் சார்பில் எந்த அனுமதியும் பெறப்படவில்லை என பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த மின் பாதையில் மின் கம்பிகள் உரசி கொள்வதால், அவ்வப்போது தீ விபத்து ஏற்படுகிறது. இந்நிலையில, ஞாயிறன்று காலை 10 மணியளவில் உட்கோட்டை தெற்கு வருவாய் கிராமத்தைச் சேர்ந்த சில விவசாயிகளுக்கு சொந்தமான தைல மரத் தோப்பு வழியாக செல்லும் மின் பாதையில், மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறி ஏற்பட்டது. இதன் காரணமாக தைலம் மரத் தோப்பில் தீ விபத்து ஏற் பட்டது. இதே பகுதியில் கடந்த 4 நாட்க ளுக்கு முன்பு உட்கோட்டை வடக்கு வரு வாய் கிராமத்தில் உள்ள தைலமரத் தோப்பு தீ பற்றி எரிந்த நிலையில், மின்பாதைக்கு அருகில் உள்ள தைல மரங்களை மின் வாரிய ஊழியர்கள் வெட்டி அகற்றினர். ஆனால், அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் ஞாயி றன்று மின் பாதையில் உள்ள மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று காற்றில் உரசி ஏற்பட்ட தீப்பொறி, தைல மரத் தோப்பில் விழுந்து பற்றி எரிந்தது. மக்கள் தீயை அணைக்க முயற்சித் தும் முடியாததால்இ தைல மரக்காடு கள் முற்றிலுமாக எரிந்து நாசமாகின. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி கள் செய்வதறியாது, அப்பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரி வித்துள்ளனர். தைல மரத்தோப்பு உள்ள பகுதி வழி யாக மின் பாதை அமைப்பதற்கு சம்பந்தப் பட்ட விவசாயிகளிடம் எந்த அனுமதி யும் பெறாமல் மின்பாதை அமைக்கப் பட்டுள்ளதாகவும், அந்த மின் பாதையை மாற்றுப் பாதையில் அமைக்க நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் மறுத்து வருவதாக விவசாயிகள் தெரி வித்தனர். இதனால் தங்களது வாழ்வா தாரம் பாதிக்கப்படுவதாக விவசாயி கள் வேதனை தெரிவித்தனர். மேலும் வயலில் செல்லும் மின் பாதையை மாற்றுப் பாதையில் அமைத்து தர வேண்டுமென கூறி தொடர் காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த ஜெயங்கொண் டம் காவல்துறையினர் மற்றும் அதிகாரி கள் பேச்சுவார்த்தை நடத்தினர். வரு வாய் ஆய்வாளர் செல்வராஜ் விவசாயி களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், மின் பாதையை மாற்றி அமைக்கக் கோரி தாசில்தாரிடம் மனு அளிக்க கூறி னார். இதையடுத்து, தங்கள் வயல் களின் வழியாக செல்லும் மின் பாதையை பொதுப் பாதையில் மாற்றி அமைக்கக் கோரி விவசாயிகள் தாசில் தாரிடம் மனு அளித்தனர். மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் காத்திருப்பு போ ராட்டத்தை கைவிட்டு கலந்து சென்ற னர்.