districts

img

புதுமைப் பெண் திட்டம் தஞ்சையில் 10 ஆயிரம் மாணவிகள் பயன்

தஞ்சாவூர் கீழவாசல் காமரா ஜர் சிலை அருகே திமுக வேட்பாளர்  ச.முரசொலிக்கு ஆதரவாக வியாழ னன்று இரவு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலரு மான உதயநிதி ஸ்டாலின் பிரச்சா ரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழக முதல்வர் ஆட்சிப்  பொறுப்பேற்றவுடன் பெண்களுக் கான கட்டணமில்லா பேருந்து பய ணத்துக்குத் தான் முதல் கையெழுத்தைப் போட்டார். இதன் மூலம் பெண்கள், குழந்தை கள், மாற்றுத் திறனாளிகள் உட்பட 460 கோடி  பயணங்கள் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர்.  தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.13. 05 கோடிக்கு பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இத்திட்டம் மிகப்பெரிய வெற்றியை  அடைந்துள்ளது. இதைப் பார்த்து கர்நாடக மாநி லத்தில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.  இதேபோல, புதுமைப் பெண் திட்டத்தின்  மூலம் தமிழகத்தில் 3 லட்சம் கல்லூரி மாணவி கள் மாதம் ரூபாய் ஆயிரம் பெறுகின்றனர். இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 10 ஆயி ரம் மாணவிகள் பயனடைகின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தமிழகத்தில் 1.16  கோடி பெண்கள் பயனடைகின்றனர். இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 4.22 லட்சம் பயன்பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார். இதில், பள்ளிக் கல்வித் துறை அமைச் சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருவை யாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் துரை. சந்திரசேகரன், தஞ்சாவூர் தொகுதி  மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக் கம், தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பி னர் டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண்.ராம நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.