தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை
மயிலாடுதுறை, அக்.10- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் “சாகர் கவாச்” என்ற பாது காப்பு ஒத்திகை நிகழ்ச்சி செவ்வாயன்று தொடங்கியது. இந்த ஒத்திகை புதன்கிழமை மாலை வரை நடைபெறுகிறது. இதில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் தரங்கம்பாடி, சந்திரபாடி, சின்னூர்பேட்டை, குட்டியாண்டி யூர், வெள்ளக்கோவில், பெருமாள்பேட்டை, புதுப்பேட்டை, தாழம்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு ஆகிய 10 மீனவக் கிராமங்களில் உள்ள கடற்கரை பகுதி மற்றும் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை, மீன்பிடி துறைமுகம் மற்றும் ஆன்மீக தலங்கள் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தலைமையில், கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேணுகோபால், மாவட்ட காவல் துணை கண்காணிப்பா ளர் மனோகரன், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட கடலோர காவல்படை, மரைன் போலீசார், கியூ பிரிவு, உளவுத் துறை போலீசார் இணைந்து இந்தப் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு மூட்டைகள் பறிமுதல்
அரியலூர், அக்.10 - அரியலூர் மாவட்டம், திருமா னூரை அடுத்த வெற்றியூர் மதுரா விராக லூர் கிராமத்துக்குட்பட்ட திடீர்குப்பம் பகுதியிலுள்ள வீடுகளில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடி தயாரிப்புக்கு உபயோகப்படுத்தப்படும் காகித குடுவைகள் மற்றும் பட்டாசு வெடிகள் செவ்வாயன்று பறிமுதல் செய்யப்பட்டன. வெற்றியூர் மதுரா விராகலூர் கிராமத்திலுள்ள பட்டாசு ஆலையில் திங்கள்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் பலியாகினர். 12 பேர் படுகாயங்களுடன் அரியலூர், தஞ்சா வூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். அதிகாரிகள் பட்டாசு ஆலைகளை சரியான முறையில் கண்காணிப்ப தில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, விராகலூர் கிராமத்துக் குட்பட்ட திடீர்குப்பம் பகுதியிலுள்ள வீடுகளில் கீழப்பழுவூர் காவல்துறையி னர் உதவியுடன் கிராம நிர்வாக அலுவ லர், வருவாய்த்துறையினர் செவ்வா யன்று சோதனையிட்டனர். இதில், ரவி, வாசு, காசி, கணேஷ் ஆகியோர் தங்களது வீட்டையே பட்டாசு ஆலை போல நடத்தியது தெரிய வந்தது. அவர்கள் வீட்டிலிருந்து, வெடி தயாரிப்புக்கு உபயோகப்படுத்தப் படும் காகித குடுவைகள் மற்றும் தயா ரித்து பதுக்கி வைத்திருந்த பட்டாசு பண்டல்கள், கரி மருந்து பண்டல்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ஒரு சிலரது வீட்டில் மருந்துகள் நிரப்பப் பட்ட ஊசி வெடிகளும் இருந்தன. அவையும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சிலர் தாங்களாகவே வந்து பதுக்கி வைத்திருந்த பட்டாசு பண்டல் களை ஒப்படைத்தனர். பறிமுதல் செய்த அனைத்தும் குழிதோண்டி புதைத்து அழிக்கப்பட்டன.
ஒருநாள் சுற்றுலாப் பயணம் சென்ற விடுதி மாணவர்கள்
தஞ்சாவூர், அக்.10 - தஞ்சாவூரில் மாணவர்களின் சுற்றுலாப் பயணத்தை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார். உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு, தஞ்சாவூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அரசு அருங்காட்சியக வளா கத்தில் சுற்றுலாத் துறை சார்பாக, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சமூக நலத்துறை விடுதிகளில் தங்கிப் படிக்கும் பள்ளி மாணவ-மாணவிகள் சுமார் 50 பேர், செவ்வாய்க் கிழமை ஒருநாள் விழிப்புணர்வு சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கொடி யசைத்து சுற்றுலாவினை தொடங்கி வைத்தார். புதுக்கோட்டையில் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களான சித்தன்னவாசல், குடுமியான்மலை, புதுக்கோட்டை அருங்காட் சியகம் மற்றும் திருமயம் கோட்டை ஆகிய இடங்களுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். சுற்றுலாவில் பங்கேற்ற அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப் பட்டன. மாணவ, மாணவிகளுக்கு உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் கா.நெல்சன், உதவி சுற்றுலா அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அரியலூர், அக்.10- பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் திங்கட்கிழமை மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் கே.இளவ ரசி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் பி. துரைசாமி, மாவட்டத் தலைவர் கே.கிருஷ்ணன், மாவட்டத் துணைத் தலைவர்கள் ஆர்.சிற்றம்பலம், ஆர்.சந்தானம், அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் த.சகுந்தலா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
அரசுக் கல்லூரியில் காயகல்ப பயிற்சி
தஞ்சாவூர், அக்.10 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில், காயகல்ப பயிற்சி நடைபெற்றது. கல்லூரி யோகா பயிற்றுநர் விஜய நிர்மலா வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் திரு மலைசாமி தலைமை வகித் தார். தஞ்சை யோகா பயிற்சியாளர் பூரண சந்திரன் சிறப்புரையாற்றினார். தொ டர்ந்து மாணவ, மாணவி களுக்கு காயகல்ப பயிற்சி வழங்கப்பட்டது. இதில், அனைத்து துறையை சேர்ந்த மாணவ-மாணவி கள் கலந்து கொண்டனர்.
உணவு விற்பனை நிலையங்களை சுகாதாரமாக வைத்திருக்க அறிவுறுத்தல்
நாகப்பட்டினம், அக்.10 - தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்புத்துறை, நாகப்பட்டினம் நகராட்சி சார்பில், உணவு விற்பனையாளர்கள் விழிப்புணர்வு கூட்டம் மற்றும் உரிமம், பதிவுச் சான்று முகாம் நாகப் பட்டினத்தில், நாகை நகராட்சி உணவு பாது காப்பு அலுவலர் அ.தி.அன்பழகன் தலைமை யில் நடைபெற்றது. உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவ லர் டாக்டர் ஆ.புஷ்பராஜ் பேசுகையில், “தமிழ்நாடு முழுவதும் உணவு விற்பனை நிறுவ னங்கள் மீதான புகார்கள் அதிகரித்துள்ளதால், உணவு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர் வும் அதிகரித்து வருகிறது. உணவு விற்பனை நிலையங்களை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். கோழி, ஆட்டிறைச்சி உள்ளிட்ட வற்றை கையாளும் உணவு ஹோட்டல்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். பழைய மற்றும் சமைத்து மீதமாகும் அசைவ உணவுகளை குளிர்பதனப் பெட்டிகளில் வைத்து மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சைவ மற்றும் அசைவ உணவு தயாரிப்பில் செயற்கை வண்ணங்களை பயன்படுத்தக் கூடாது. அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் பலகா ரங்களை வைத்து விற்பனை செய்யக்கூடாது. தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகளில் சட்னி, சாம்பார், குருமா, காபி, டீ போன்றவற்றை கட்டி விற்பனை செய்யக் கூடாது. புளித்துப்போன மற்றும் கெட்டுப்போன நிலையில் தயிர், மோர் மற்றும் தேங்காய் சட்னி போன்றவற்றை பயன் படுத்தக்கூடாது. உபயோகப்படுத்திய எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது. மீதமா கும் உணவு எண்ணெய்யை பயோ டீசல் தயா ரிப்புக்கு வழங்கிட வேண்டும். அனைத்திற்கும் மேலாக உணவு பாதுகாப்புத்துறை உரிமம், பதிவுச் சான்று இல்லாமல் யாரும் உணவு விற்பனை மேற்கொள்ளக் கூடாது. உணவு பாது காப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011-க்கு முரணாக செயல்படும் அனைத்து உணவு விற்பனை நிலையங்கள் மீதும் வழக்கு பதிவு செய்தல், அபராதம் விதித்தல் உள்ளிட்ட சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும்” என்றார். ஹோட்டல் மற்றும் பேக்கரி உணவக சங்க நாகப்பட்டினம் நகரத் தலைவர் இரா.முருகை யன் உட்பட டீக்கடை, பேக்கரி, ஸ்வீட் ஸ்டால், இட்லி கடை, சாலையோர உணவகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். திருமருகல் வட்டார உணவு பாது காப்பு அலுவலர் எஸ்.ஆண்டனிபிரபு நன்றி கூறினார்.