அரியலூர், ஏப்.10 - 2024 மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, அரியலூர் மாவட் டம், உடையார்பாளையத்தை அடுத்த பிராஞ்சேரி, மலங்கன் குடியிருப்பு கிராமங்க ளில் வசிக்கும் இருளர் இன மக்களிடையே துண்டு பிரசுரங்கள் வழங்கி புதன்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், “எனது ஓட்டு எனது பெருமை” என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் மேற் கொள்ளப்பட்டது. நிகழ்வில், உடையார்பா ளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, தேர்தல் விழிப்புணர்வு அலுவலர் ராம லிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.