திண்டுக்கல்லில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்திற்கு ஆதரவாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் திங்களன்று காலை 10 மணி அளவில் எல்.ஜி.பி. காம்பவுண்ட்டில் இருந்து நடைபயண ஊர்வலமாக சென்றனர்.
சிவப்பு பனியன், சிவப்பு தொப்பி அணிந்தும், சிவப்பு பலூன்கள், சிவப்பு குடைகளை ஏந்தியும் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்தனர்.
ஊர்வலத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் கொடி அசைத்து தொடக்கி வைத்தார்.
ஊர்வலம் திண்டுக்கல் நகரின் முக்கிய பகுதிகளான பேருந்து நிலையம், கடைவீதி, அரசமரம் வழியாகச் சென்று வாணி விலாஸ் மேட்டை அடைந்தனர்.
நடைபயண ஊர்வலத்தில் வாலிபர் சங்க மாநில செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், மாநில துணைத்தலைவர் எஸ்.மணிகண்டன், மாநில துணைச்செயலாளர் எஸ்.செல்வராஜ், மாநிலக்குழு உறுப்பினர் முனீஸ்வரன், மாவட்டத்தலைவர் கே.ஆர்.பாலாஜி, மாவட்டச் செயலாளர் ஏ.கே.முகேஷ், பொருளாளர் பிரேம்குமார், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தௌ. சம்சீர் அகமது, மாவட்டச்செயலாளர் தீபக்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி ஊர்வலத்தை நிறைவு செய்து உரையாற்றினார்.