districts

விவசாயி விஷமருந்திய மயங்கிக் கிடந்த போது பதற்றமில்லாமல் செல் பேசிக்கொண்டிருந்த ஆய்வாளர்

திண்டுக்கல், பிப்.13- திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு அருகேயுள்ள அம்மைய நாயக்கனூர் காவல்நிலையத்தில் விஷமருந்திய விவசாயி மயக்க முற்ற நிலையில் அவரைக் காப் பாற்றாமல் எந்த ஒரு பதற்றமுமில் லாமல் காவல் ஆய்வாளர் சண்  முகலட்சுமி செல்போன் பேசிக் கொண்டிருந்தார். மற்றொரு பெண்  காவலர் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார் என்ற வீடியோ ஆதாரங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொடைரோடு அருகேயுள்ள குல்லக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட கன்னாமர் நகர் பகுதி யைச் சேர்ந்த விவசாயி பாண்டி.  இவருக்கு சிறுமலை அடிவாரத்தில் உள்ள 2 ஏக்கர் நிலத்தில் விவ சாயம் செய்து வருகிறார். இவரது நிலத்திற்கு அருகில் முன்னாள் ஐ.ஜி. ஒருவரின் தோட்டம் உள்  ளது. பாண்டியனின் நிலத்தை அப கரிப்பதற்காக ஐ.பள்ளபட்டியைச் சேர்ந்த நாச்சியப்பன், பழைய  வத்தலகுண்டுவைச் சேர்ந்த வழக்க றிஞர் சங்கர், பொட்டிசெட்டிபட்டி யைச் சேர்ந்த சின்னக்கருப்பு ஆகி யோர் மிரட்டி வந்தனர். இது தொடர்  பாக விவசாயி பாண்டியன் தனது  மகன் சதீஷ் கண்ணனுடன் சென்று  அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் சில மாதங்களுக்கு முன்பு புகார் கொடுத்தார். மேற்படி 3 பேரும் ஐ.ஜி.  தோட்டத்தில் வேலை செய்பவர் கள். எனவே காவல்நிலையத்தில் உள்ள அதிகாரிகள் இந்த புகாரை பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை.  மாறாக புகார் கொடுத்த விவ சாயி பாண்டியின் மீது பொய்  வழக்குகளை அம்மையநாயக்க னூர் காவல்துறையினர் ஜோடனை செய்து பதிந்துள்ளனர். தனது புகா ரின் மீது வழக்கு பதியாத நிலை யில் விவசாயி பாண்டி இந்த வழக்கை பதிவு செய்ய வேண்டும்  என்று நிலக்கோட்டை நீதிமன் றத்தில் விவசாயி பாண்டியின் மகன் சதீஸ்கண்ணன் கொடுத்த புகா ரின் அடிப்படையில் வழக்கை பதிவு  செய்து விசாரிக்க வேண்டும் என்று  கடந்த 28.12.2022 அன்று மாஜிஸ் திரேட் உத்தரவிட்டுள்ளார். அதன் நகலும் அம்மையநாயக்கனூர் காவல்நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி வழக்கு பதியாமல் இழுத்தடித்து வந்தார். இது தொடர்பாக விவ சாயி பாண்டியும் அவரது மகன்  சதீஷ்கண்ணனும் அம்மையநாயக் கனூர் காவல்நிலையம் சென்று கேட்ட போது காவல்நிலைய ஆய் வாளர் சண்முக லட்சுமி விவசாயி பாண்டியை மிக இழிவாகத் திட்டி யுள்ளார். இதனால் மனமுடைந்த விவசாயி பாண்டி கடைக்கு சென்று விஷம் வாங்கி வந்து காவல்நிலையத்திற்குள் விஷம ருந்தினார்.

 நீ செத்தா எனக்கென்ன? முன்னதாக பாண்டி இந்தப் பிரச்சனை தொடர்பாக கடந்த 4-ஆம் தேதி திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று இன்ஸ் பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று மனுக் கொடுத்தி ருக்கிறார். மனுநீதி நாளில் கொடுக்  கப்பட்ட மனு குறித்து விசாரணை  செய்யுமாறு ஆட்சியர் அலுவல கத்தில் இருந்து ஸ்டேசனுக்கு உத்த ரவு வந்துள்ளதாக தெரிகிறது. இத னையடுத்து ஆத்திரமடைந்த காவல் ஆய்வாளர் விவசாயி பாண்டியை மீண்டும் மிரட்டியுள் ளார். இந்த நிலையில், நீங்கள் நட வடிக்கை எடுக்கவில்லை என்றால் நான் விஷம் குடித்து சாவதைத் தவிர வேறு வழியில்லை; அப்போ தாவது நான் கொடுத்த புகாரின் மீது  எப்.ஐ.ஆர். போடுவீர்களா என்று ஆய்வாளர் சண்முக லட்சுமியிடம் பாண்டி கேட்ட போது நீ செத்தா எனக்கென்னவந்தது என்று கூறிய தோடு தரக்குறைவான வார்த்தை கள் பேசியதால், பாண்டி மனமு டைந்து தற்கொலை முடிவுக்கு வந்தார். என அவரது சகோதரர் முனியாண்டி தெரிவிக்கிறார். எனது சகோதரர் அண்ணன் இறப்புக்கு முக்கிய காரணம் காவல் ஆய்வாளர் சண்முகலட்சுமி தான். அவர் இறந்த பிறகு அரை மணி நேரம் கழித்து எப்.ஐ.ஆர் போட்டுள்ளனர். முன்பே எப்ஐஆர் போட்டியிருந்தால் ஒரு உயிர் இழப்பை தவிர்த்திருக்கலாம் என்றும் விவசாயி பாண்டியின் சகோ தரர் முனியாண்டி கூறியுள்ளார். ஆயுதப்படைக்கு மாறுதல் இந்த பிரச்சனையையொட்டி காவல் ஆய்வாளர் சண்முக லட்சு மியை ஆயுதப்படைக்கு பணியிட மாறுதல் செய்து திண்டுக்கல் மாவட்டக் காவல்த்துறைக்க கண்காணிப்பாளர் வி. பாஸ்கரன்  உத்தரவிட்டுள்ளறார். மேலும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்  கப்பட்டு விசாரணை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.