districts

img

வயநாடு நிவாரணமாக ரூ .5 லட்சம் கேரள நிதியமைச்சர் பாலகோபாலிடம் வழங்கல்

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு நிவாரணமாக திண்டுக்கல் மாவட்டம்  ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் ராமலிங்கம்பட்டியில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் கோவில் அறக்கட்டளையின் சார்பாக நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ. 5 லட்சம் காசோலை வழங்கப்பட்டது.இதை அறங்காவலர் சேது பாலகிருஷ்ணன் கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபாலிடம் வழங்கினார்.இந்நிகழ்வில் ஆலத்தூர் மக்களவை உறுப்பினர் பி.கே.ராதாகிருஷ்ணன், திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் பங்கேற்றனர்.