வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு நிவாரணமாக திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் ராமலிங்கம்பட்டியில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் கோவில் அறக்கட்டளையின் சார்பாக நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ. 5 லட்சம் காசோலை வழங்கப்பட்டது.இதை அறங்காவலர் சேது பாலகிருஷ்ணன் கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபாலிடம் வழங்கினார்.இந்நிகழ்வில் ஆலத்தூர் மக்களவை உறுப்பினர் பி.கே.ராதாகிருஷ்ணன், திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் பங்கேற்றனர்.