சின்னாளப்பட்டி, பிப்.16- திண்டுக்கல் மாவட்டம், சின்னா ளப்பட்டி பள்ளியில் தீண்டாமை கடைப்பிடித்த ஆசிரியர்கள் மற்றும் சாதிப்பாகுபாட்டுடன் நடந்து கொண்ட சக மாணவிகள் சிலரின் செயல்களால் மனமுடைந்து 2 பள்ளி மாணவிகள் தற்கொ லைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. சின்னாளப்பட்டியில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் தொப்பம்பட்டியைச் சேர்ந்த அருந் ததியர் சமூகத்தைச் சேர்ந்த மாணவி களும் படித்து வருகிறார்கள். இந்த மாணவிகள் பள்ளியிலி ருந்து வீட்டுக்குச் செல்லும் போது பேருந்தில் மற்ற மாணவிகளுடன் அமர்ந்து செல்ல முடியவில்லை. சாதி ஆதிக்கச் சிந்தனை ஊட்டப் பட்ட சில மாணவிகள், அருந்ததிய மாணவிகளை அருகில் அமரக் கூடாது என்று கூறியதால், ஒரு வாரமாக நின்றுகொண்டே பய ணித்துள்ளனர். மேலும் பள்ளியி லும் இதே போன்ற நிலை இருந்த தாக கூறப்படுகிறது. இது தொடர் பாக பள்ளி வகுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியர் ஆகியோரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. மனமுடைந்த நிலை யில் 2 அருந்ததிய மாணவிகளும் பினாயிலை குடித்து தற்கொ லைக்கு முயன்றுள்ளனர். இத னையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்தையடுத்து தொப்பம்பட்டி பகுதி கிராம மக்கள் அம்பாத்துரை காவல்நிலையத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தீண்டாமை கடைப்பிடித்த ஆசிரியர்கள்
இந்த சம்பவத்தையடுத்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர்கள் எம்.ஆர்.முத்துச்சாமி, கே.டி.கலைச் செல்வன், ஆர்.வனஜா, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலச்செயலாளர் ஜி. ராணி, இந்திய ஜனநாயக வாலி பர் சங்க நகரச்செயலாளர் எம். பிரேம்குமார் ஆகியோர் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளையும். அவர்களின் பெற்றோர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினர். இது தொடர்பாக மாணவிகள் தெரிவித்த தகவல்கள் அதிர்ச்சி யளிக்கக்கூடியதாக இருந்தன. தொப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த 4 மாணவிகளிடம் 2 ஆசிரியைகளே தீண்டாமை சிந்தனையுடன் நடந்து கொண்டதை தெரிவித்தனர். சீ கருமம் என்றும், ஏய் சாக்கடை என் றும் மாணவிகளை இந்த ஆசிரி யைகள் இழிவாகத் திட்டியுள்ள னர். இதனால் மனமுடைந்த மாண விகள் இருவரும் பள்ளி கழிப்பறை யில் உள்ள பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
காவல் நிலையம் முற்றுகை
இந்த சம்பவத்தையடுத்து சில இடைத்தரகர்கள் பள்ளி நிர்வா கத்திற்கும், பாதிக்கப்பட்ட மாணவி களின் பெற்றோர்களுக்கும் இடை யில் ‘பஞ்சாயத்து’ பேசி பணம் வாங்கித்தந்து பிரச்சனையை மூடி மறைக்க முடிற்சி மேற்கொண்ட னர். இந்நிலையில் தொப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அருந்ததிய மக்கள் அம்பாத்துரை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோட் டாட்சியர். முதன்மைக்கல்வி அலு வலர், மாவட்டக்கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். திண்டுக்கல்லில் அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் பத்திரிகையாளர்கள், மற்றும் பிற தலித் அமைப்பைச் சேர்ந்த தலை வர்களிடம் பள்ளி மாணவிகளை பேசக்கூடாது என்று அதிகாரிகள் மற்றும் சில தலித் தலைவர்கள், இடைத்தரகர்கள் கூறியதன் அடிப்படையில் பள்ளியில் என்ன நடந்தது என்பதை கேட்கவிடாமல் பெற்றோரே மறுத்தனர். இந்த சம்பவம் சின்னாளபட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பிரேமலதா, சாந்தா, ரம்யா, கலைச்செல்வி, தலைமை ஆசி ரியை வினாயக ஜெயந்தி ஆகி யோர் மீது சின்னாளப்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அமைச்சர் ஐ.பெரியசாமி, மருத்துவமனை டீனை தொடர்பு கொண்டு மாணவிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார்.