districts

img

தொடர்மழையால் குடிநீர் பஞ்சம் அபாயம் நீங்கியது: திண்டுக்கல் ஆத்தூர் காமராஜர் அணை நீர்மட்டம் 21 அடியாக உயர்ந்தது

சின்னாளபட்டிசு,ஜூன் 8- திண்டுக்கல் மாநகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆத்தூர் காமராஜர் நீர்தேக் கத்தின் நீர் மட்டம் 21 அடியாக உயர்ந்தது. இதனால் திண்டுக் கல், சின்னாளபட்டி நகரங்க ளுக்கு குடிநீர் பஞ்சம் அபாயம் நீங்கியது.

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான தாண்டிக்குடி, ஆடலூர், பன்றிமலை, பண் ணைக்காடு, புல்லாவெளி பகுதியில் மழை பெய்தால், செம்பட்டி அருகே உள்ள ஆத் தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தி ற்கு மழை தண்ணீர் வருவ தற்கு இயற்கையாகவே மலை யில் வாய்க்கால்கள் அமைந்துள்ளன.    

ஆத்தூர் காமராசர் நீர்த் தேக்கத்தின் மொத்த நீர்மட்டம் 24 அடியாகும். திண்டுக்கல் மாநகராட்சி, சின்னாளபட்டி, சித்தையன்கோட்டை பேரூ ராட்சிகள் உள்பட 20 க்கும்  மேற்பட்ட கிராம ஊராட்சிக ளின் முக்கிய குடிநீர் ஆதார மாக விளங்குவது ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு 3 முறை அணை நிரம்பி மறுகால் பாய்ந்தது. தற்போது புயல் மழை மற்றும் பருவ மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி களில் அதிக மழை பெய்தது. இதனால் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.  கடந்த வாரம் பத்து அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் தற்போது 21 அடியாக உயர்ந் துள்ளது. தண்ணீர் மறுகால் செல்லும் பாதையில் அணையில் வளர்க்கப்படும் மீன்கள் வெளியேறாமல் இருக்க தடுப்பு வலை கட்டி யுள்ளனர். 

இதுகுறித்து ஆத்தூர் பாசன விவசாயிகள்  கூறுகை யில், தற்போது காமராஜர் நீர்த்தேக்கம் இரண்டு தினங்களில் அணை நிரம்பி மறுகால் செல்லும் நிலைமை உருவாகி உள்ளது. காமராஜர் நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர் மறு கால் வழியே வெளியே செல்லும் போது நூற்றுக்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பயனடைவார்கள் என்றார்.