districts

img

கோவிலூரில் சுடுகாட்டை தனிநபர் -மின்வாரியம் ஆக்கிரமித்ததற்கு எதிர்ப்பு அனைத்துக்கட்சியினர்- பொதுமக்கள் சாலை மறியல்

திண்டுக்கல், மார்ச் 2- திண்டுக்கல் அருகே கோவிலூரில் ஊர்  மக்களின் சுடுகாட்டை ஆக்கிரமித்த மின்வாரி யத்தைக் கண்டித்து சிபிஎம் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் கிராம மக்களுடன் சேர்ந்து  சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டு கைதாகினர்.   திண்டுக்கல் அருகேயுள்ளது கோவிலூர்.  இந்த ஊரில் சர்வே எண். 371ல் ஒரு ஏக்கர்  71 செண்ட் நிலம் உள்ளது. எண்.370ல் பாட்டை  புறம்போக்கு உள்ளது. தமிழ்நாடு மின்வாரி யம் இந்த பகுதியில் 61 சென்ட் நிலத்தை அனு பவ பாத்தியமாக வைத்துள்ளது. ஆனால்  பொதுமக்களின் சுடுகாட்டு நிலம் உள்ள  சர்வே எண்.371ல் உள்ள ஒரு ஏக்கர் நிலத்தில்  மின்வாரிய தளவாட சாமான்களை போட்டு  ஆக்கிரமித்துள்ளது. தனியார் ஒருவர் சுடுகாட்டு நிலம் 20 சென்ட்டை ஆக்கிர மித்துள்ளார். ஏற்கனவே நிலத்தை ஆக்கிர மித்தவர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை யொட்டி நிலத்தை அளக்க வேண்டும் என்று  நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து குஜி லியம்பாறை வட்டாட்சியர் அலுவலக அதி காரிகள் நிலத்தை அளந்த போது, வழக்கு  போட்டவர் 20 சென்ட் நிலத்தை ஆக்கிரமித் தது தெரியவந்தது. ஆனால் அந்த ஆக்கிர மிப்பாளர் அந்த 20 சென்ட் நிலத்தை திருப்பி  தரவில்லை. இந்நிலையில் மின்வாரிய அலு வலகம் சுடுகாட்டை ஆக்கிரமித்த ஒரு ஏக்கர் நிலத்தையும் தரவில்லை. இதனால் சுடு காட்டின் விஸ்தீரணம் சுருங்கி உள்ளது. மேலும் சுடுகாட்டுக்கு போகிற பாதைகளிலும் மின்வாரிய அலுவலக அதிகாரிகள் தளவாட  பொருட்களை குவித்து வைத்துள்ளனர். இத னால் சுடுகாட்டுக்கு இறந்தவர்களின் உடலை  எடுத்துச்செல்ல முடியாத நிலை உள்ளது. இறந்தவர்களை அடக்கம் செய்ய வழி யின்றி நீரோடைகளில் அடக்கம் செய்து வரு கிற நிலை உள்ளது. எனவே மின்வாரியத் தால் ஆக்கிரமிக்கப்பட்ட சுடுகாட்டு நிலத்தை கையகப்படுத்தி தர வேண்டும் என்று கோரி  கிராம மக்கள் வியாழனன்று சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இந்த மறியல் போராட்டத்தில் பொதுமக்க ளோடு அனைத்து கட்சியைச் சேர்ந்தவர் களும் கலந்து கொண்டனர்.  அவர்களை எரி யோடு போலீசார் கைது செய்தனர். மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மாவட்  டச்செயற்குழு உறுப்பினர் டி.முத்துச்சாமி, ஒன்றியச்செயலாளர் பெரியசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ். முருகேசன், முன்னணித்தோழர்கள் ராகேஷ், சண்முகம், நாகராஜ், சக்திவேல், பொன்  னுச்சாமி, ராஜலிங்கம் ஆகியோர் கைதாகி னர். திமுக சார்பாக கே.செந்தில்குமர், செல்வம், பாலு, பேபி,, அதிமுக சார்பாக  மேற்கு மாவட்ட சிறுபான்மை அணி தலை வர் எஸ்.எம்.ஹைதர்அலி, சிவக்குமார், தேமுதிக சார்பாக கணேசன்  உள்ளிட்ட பலர் கலந்து கைது செய்யப்பட்டனர். குஜிலியம்பாறை வட்டாட்சியர் கு. ரமேஷ், காவல் ஆய்வாளர்   பாலமுருகன் ஆகியோர் மின்வாரிய அதிகாரிகளிடம் ஒரு ஏக்கர் சுடுகாட்டு நிலத்தை ஆக்கிரமிக்க போடப்பட்டுள்ள தளவாட சாமான்களை அகற்ற வேண்டும் என்று நேரில் சென்று வலியுறுத்தினர். இதன்பின்னரே தளவாட பொருட்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் முழுமையாக அகற்றப்பட்டது. கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் அங்கி ருந்து அகற்றப்பட்டன. இரண்டாவது கோரிக்  கையான அரசு ஆரம்ப சுகாதார மையம் இடிந்  ததால் மரத்தடியில் செயல்பட்டு வந்தது. இந்த போராட்டத்தையடுத்து தற்போது நிதி ஒதுக்கீடு செய்து மருத்துவமனை மீண்டும் கட்டித்தரப்படும் என்று தாசில்தார் உறுதி யளித்தார்.  மேலும் சுடுகாட்டை அளவீடு செய்து சுத்தம் செய்து தருவதற்கு  வட்டாட்சி யர் கு.ரமேஷ் மற்றும் காவல் ஆய்வா ளர்  பாலமுருகன் தலைமையில் அதிகாரிகள்  நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். போராட்டம் வெற்றி பெற்றதையடுத்து கைது  செய்யப்பட்ட அனைத்து கட்சியினரும் பொது மக்களும் மகிழ்ச்சியடைந்தனர். (நநி)