திண்டுக்கல், ஜூன் 11- திண்டுக்கல், மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி யில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் இருவர் சென்னை யில் நடைபெறும் 44வது ஒலிம்பியாட் சதுரங்க போட்டி களை பார்வையிட தேர்ந்தெடுக்கப்பட்டனர். திண்டுக்கல்லில் 44வது ஒலிம்பியாட் சதுரங்க போட்டிகள் வருகிற ஜுலை 28ம் தேதி சென்னை அருகே யுள்ள மாமல்லபுரத்தில் தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட அளவில் ஆர்.கே.ஜி. ரோட்டரி ஹாலில் 15 வயதுக் குட்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு போட்டிகள் ஜுன் 10ம் தேதி துவங்கியது. திண்டுக்கல் மாவட்ட சதுரங்க கழக தலைவர் ஜி.சுந்தரராஜன் துவக்கி வைத்தார். துணைத் தலைவர் ராமலிங்கம், முதன்மை நடுவர், ரமேஷ்குமார். சிறப்பு விருந்தினராக சண்முகம், மாவட்டச்செயலாளர் அப்துல்நாசர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 2 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டிகளில் திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம். பள்ளி மாணவி சி.சியோனா ஜுடித் மற்றும் ஒட்டன்சத்திரம் அக்சயா வித்யாலயா பள்ளி மாணவர் ஜேக் சாமுவேல் ஆகியோர் முதலிடம் பெற்றனர். இவர்கள் ஒலிம்பியாட் போட்டியை பார்வையிட அழைத்துச் செல்லப் பட உள்ளனர். இந்நிகழ்ச்சியில் 20 மாணவிகளும், 25 மாண வர்களும் பங்கேற்றனர். முதலிடம் பிடித்த மாணவ, மாண வியருக்கு மாவட்ட சதுரங்க கழக தலைவர் ஜி.சுந்தர ராஜன் கோப்பைகளை வழங்கி சிறப்பித்தார்.. அனைவ ருக்கும் சிறப்பு பரிசாக கோப்பைகள் வழங்கி கௌரவிக்கப் பட்டனர். டாக்டர் கருணாகரன் நன்றி கூறினார்.