திண்டுக்கல், ஜன.4- குறவர் சமூக மக்களை பழங்குடி பட்டியலினத்தில் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு குறவன் பழங்குடியின முன்னேற்ற சங்கம் வேண்டுகோள் விடுத் துள்ளது. இச்சங்கத்தின் சார்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் 5 ஒன்றியங்களில் ஒன்றி யக்குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த அமைப்புக்கூட்டங்களில் மாநில பொதுச்செயலாளர் ஏ.வி.சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த அமைப்புக்கூட்டங்களில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஏ.வி. சண்முகம் கூறுகையில், பண்டைய தமிழ் சமூகத்தில் குறவர் சமூகம் பழங்குடி சமூக மாக இருந்து வந்தது. வேடர், வேட்டுவர் என்றும் அறியப்பட்ட இவர்கள் ஐந்திணை நிலங்களில் ஒன்றான மலையும் மலை சார்ந்த பகுதியான குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்தவர்கள். சங்க இலக்கியங்களிலும் குறவர்கள் பழங்குடியினர் என்பதற்கு ஏரா ளமான ஆதாரங்கள் உள்ளன. எஸ்.சி. பட்டி யலில் இருக்கும் இந்த மக்களை பழங்குடி யின பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும், வத்தலகுண்டுவில் துப்புரவு காலனியில் குறவன் சமூக மக்களுக்கு கட்டிக்கொடுக் கப்பட்ட அரசு தொகுப்பு வீடுகளை மரா மத்து செய்து தர வேண்டும். பூண்டு, பழங்கள் விற்பனை செய்ய வங்கி களில் வாகனம் வாங்குவதற்கும், தொழில் செய்வதற்கும் மானியத்துடன் கூடிய கடன் வழங்க அரசு முன்வரவேண்டும். கூடை முடைவதற்குத் தேவையான மூங்கில், நொச்சிக்குச்சி ஆகியவற்றை சிறு மலை, பன்றிமலை, கொடைக்கானலில் உள்ள வனப்பகுதிகளில் எடுப்பதற்கு அனு மதி வழங்க வேண்டும். வனத்துறை அதி காரிகள் கெடுபிடி வசூல் செய்யக்கூடாது. கந்துவட்டிக்கொடுமையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.