districts

சின்னூர், பெரியூர் மலைவாழ் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி.

திண்டுக்கல், ஆக.27 - கொடைக்கானல் பகுதி சின்னூர், பெரியூர் மலைக் கிராம மக்களை திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. நேரில் சந்தித்து குறை களை கேட்டறிந்தார். 

சமீபத்தில் கொடைக்கானல் வெள்ளகவி ஊராட்சி பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (45) என்ற பளியர் பழங்குடி பெண் 10 நாட்களாக உடல்நலமின்றி இருந் தார். இதனையடுத்து அக்கிராம மக்கள் அந்த பெண்ணை டோலி  கட்டி பெரியகுளம் அரசு மருத்து வமனைக்கு தூக்கிச் சென்றனர். கடும் மழை காரணமாக கள்ளாறு, குப்பாம்பாறை ஆறுகளில் ஏற்பட்ட  வெள்ளப் பெருக்கு காரணமாக, அப்பெண்மணியை பல்வேறு சிர மங்களுக்கு மத்தியில் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பழனி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெள்ளகவி கிராம ஊராட் சியில் உள்ள இந்த கிராமத்தின் மக்களை, திண்டுக்கல் மக்களவை  உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் திங்களன்று நேரில் சென்று பார்வை யிட்டார். அந்த கிராம மக்களைச்  சந்தித்து குறைகளை கேட்டறிந் தார். சின்னாம்பாறை முதல் சின்னூர் பி.ஆர். பளியர் காலனி வரை சாலை அமைக்கவும், கல்லாறு,  குப்பாம்பாறை ஆறுகளிடையே பாலம் கட்டுவது தொடர்பாகவும் இடங்களை ஆர்.சச்சிதானந்தம் ஆய்வு செய்தார். 

சின்னூர் கிராமத்திற்கு என்று தனியாக சொந்தக் கட்டடத்தில் இயங்கும் வகையில் அங்கன்வாடி மையம், சமுதாயக்கூடம், ரேசன் கடை கட்டித் தர வேண்டும். வேளாண் சாகுபடி நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என்று அந்த கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். இதே போல் பெரியூர் கிராம மக்களும், வெள்ளக்கவி கிராம  மக்களும் கோரிக்கை வைத்தனர். 

இதனையடுத்து அவர்களிடம் பேசிய ஆர்.சச்சிதானந்தம் எம்.பி.,  விரைவில் இப்பகுதியிலுள்ள ஆறு களின் குறுக்கே பாலங்களும், சாலைகளும் அமைத்து தரப்படும்.  அப்படி திட்டங்கறை நிறைவேற்றும் போது அங்கன்வாடி, சமுதாயக் கூடம், ரேசன் கடை உள்ளிட்ட  திட்டங்களும் பழனி சட்டமன்ற உறுப் பினர் ஐ.பி.செந்தில்குமாருடன் இணைந்து நிறைவேற்ற நடவ டிக்கை எடுக்கப்படும். மேலும் கலைஞர் கனவு இல்ல வீடுகளும்  கட்டித்தர நடவடிக்கை மேற்கொள் ளப்படும். வன உரிமைச்சட்டப்படி சாகுபடி நிலங்களுக்கு பட்டா கிடைக்க  நடவடிக்கை எடுக்கப் படும் என்று உறுதியளித்தார். 

மலைக் கிராம மக்களுக்கு போர்வைகள் வழங்கல்

பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் ஏற்பாட்டின் பேரில் பாதாள செம்பு முருகன் கோவில் அறக்கட்டளை சார்பாக  அறங்காவலர் சேதுபால கிருஷ்ணன், ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. ஆகியோர் அக்கிராம மக்க ளுக்கு போர்வைகளும், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நோட்டு கள், பேனாக்களும் வழங்கினர். 

இந்நிகழ்வின் போது தமிழ்நாடு  மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தா.அஜாய் கோஷ், சிபிஎம் கொடைக்கானல் செயலாளர் ஜோசப், சிபிஎம் தேனி  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், வெண்மணி, வெள்ளகவி ஊராட்சித் தலைவர்  புருசோத்தமன், மன்ற உறுப்பி னர்கள் சங்கர், ராஜ்கபூர், திமுக நிர்வாகி நாகமுத்து, சிபிஎம் முன்னாள் கவுன்சிலர் சின்னு ஆகி யோர் பங்கேற்றனர்.