districts

img

‘ஒரு காலை கல்லறையிலும், ஒரு காலை தேர்தல் மேடையிலும் வைத்துள்ளேன்’

திண்டுக்கல், ஏப்.6- இந்திய நாட்டின் இறையாண்மையை பாது காக்க ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கேட்டுக்கொண்டுள்ளார். 

திண்டுக்கல் மணிக்கூண்டில் வெள்ளியன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், ‘‘இந்த பொது தேர்தலில் நமது வாக்காளர்கள் கவனச்சிதறல்  இல்லாமல் வாக்க ளிக்க வேண்டும். வேட்பாளருக்காக, அல்லது கூட்டணிக்காக, எங்களுக்காக நீங்கள் வாக்க ளிக்க வேண்டும். உங்களை பாதுகாக்க உங்க ளுக்காக வாக்களிக்க வேண்டும். 

கடந்த 10 ஆண்டுகளாக இந்த மக்கள் ஜன நாயகக் காற்றை சுவாசிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். மோடி ஆட்சியில் இன்றைக்கு அறிவிக்கப்படாத நெருக்கடி. எல்லா ஜனநாயக அமைப்புகளும் அவரது காலடியில் இருக்க வேண்டும் என்று கருதிக்கொண்டிருக்கிற ஆட்சி கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வருகிறது. மாநில உரிமைகள் நசுக்கப்பட்டு உள்ளன. ஜன நாயகம் குற்றுயிரும், குலையுயிருமாக தீவிர  சிகிச்சைக்கு போய் சிகிச்சை பெற்றுக் கொண்டி ருக்கிறது. மீண்டும் பிழைக்குமா என்று சொல்லக் கூடிய அளவிலே தான் நடந்து கொண்டி ருக்கிறது. அந்த ஜனநாயகத்தை காப்பாற்றும் மருத்துவர்கள் தான் நீங்கள். 

எனது உயிர் முக்கியமல்ல!
என்னைப் பார்த்து முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டார். உங்கள் வயது என்ன? 91வயது. இந்த வெப்பமான சூழலில் நீங்கள் பிரச்சாரத்திற்கு போக வேண்டுமா என்று கேட்டார். ஆனால் அதைப்பற்றி கவலைப்படவில்லை. எனது உயிர் முக்கியமல்ல. மக்களின் வாழ்வு முக்கியம். எனது வாழ்க்கை முடிந்துவிட்டது. ஒரு காலை கல்லறை யிலும், இன்னொரு காலை இந்த தேர்தல் மேடை யிலும் வைத்திருக்கிறேன். இப்படிப்பட்ட சூழலில் கூட மக்களை சந்தித்து பேச வேண்டும் என்ற நிலைப்பாடு தான். 

உலக மகாநடிகர் மோடி
நமது பிரதமர் மாதிரி உலக மகா நடிகர் வேறு யாரும் இருக்க முடியாது. ‘நடிகன்’ என்ற திரைப் படம் வந்தது. அதில் சத்யராஜ் நடித்திருப்பார். முன்னரே இந்த படத்தின் இயக்குநர் மோடியை பார்த்திருந்தால் சத்யராஜூக்கு பதில் மோடி யையே நடிக்க வைத்திருப்பார். 

2019-ல் 2-ஆவது முறையாக மோடி வெற்றி பெற்ற பிறகு பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. பிரதமர் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் உறுதி மொழி யைச் சொன்னவுடன் மேடையில் இருந்து இறங்கி போனார். மேடையில் இருந்து தலைவர்கள் இவர்  போவதைப் பார்த்து யாரையோ வணக்கம் செய்து  மரியாதை செய்ய போகிறார் என்று நினைத்துக் கொண்டிருந்த போது நேராகச்சென்ற மோடி அங்கு இந்திய அரசியல் சாசனம் பற்றி வைக்கப் பட்ட போர்டு அருகில் சென்று விழுந்து விழுந்து கும்பிட்டார். ஒருவர் நம் காலில்  விழுந்தார் என்றால் நம் காலை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும். 

அன்றைக்கு அரசியல் சட்டத்தை பாதுகாக்க போகிறோம் என்றார் மோடி. இதைவிட மகா வித்தை என்ன இருக்க முடியும்? நடைமுறையில் இந்த அரசியல் சாசனத்தின் 5 அம்சங்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றனவா? மக்களின் இறையாண்மையை கபளீகரம் செய்துவிட்டனர். மதச்சார்பின்மைக்கு இங்கே இடமில்லாமல் செய்துவிட்டனர். அதே போல சமதர்மத்திற்கும் இங்கே இடமில்லாமல் செய்துவிட்டனர். எல்லா பொதுத்துறை நிறுவனங்களும் அம்பானி, அதானி, டாட்டா, பிர்லாவிடம் உள்ளன. 

எதேச்சதிகார பிரதமர் 
பாரத் ரத்னா விருது கூட யாருக்கு அளித்தால் அதிகமான வாக்குகள் கிடைக்கும் என்று கணக்கு போடுபவர் மோடி. அத்வானிக்கு பாரத் ரத்னா விருது அறிவித்து அதை நேரில் சென்று கொடுக்க குடியரசுத்தலைவர் முர்மு  போனார். அத்வானி யின் வயது காரணமாக நேரடியாக சென்ற போது நமது பிரதமரும் உடன் சென்றார். இந்த பெருந் தன்மை பாராட்டப்பட வேண்டியது தான். அந்த நிகழ்வு புகைப்படமாக பத்திரிகையில் வந்துள் ளது. பெண்கள் யாராவது பிரதமரைப் பார்க்கச் சென்றால் ‘நாரி சக்தி’ என்று காலை தொட்டுக் கும்பிடுவது போல நடிப்பார். பத்திரிகையில் வந்துள்ள படத்தைப் பாருங்கள். அதில் குடியரசு தலைவர் நின்று கொண்டிருக்கிறார். நாட்டின் முதல் குடிமகள். மதிப்புறு தலைவர். பிரதமருக்கு ‘சக்தி’ இருக்கலாம். ஆனால் சக்தியாக இருக்கிற குடியரசுத்தலைவரின் நிலை என்ன? அந்த அம்மையார் நிற்கிறார்.இவர் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.

எதேச்சதிகாரம் ஆட்சிபுரிகிறது என்பதற்கு இதை விட மிகப்பெரிய ஆதாரம் வேறு கிடையாது. ஆனால் அந்த பதவியையாவது மதிக்க வேண்டா மா? பதவியேற்பின் போது பிரதமர் பிரமாணம் எடுத்துக்கொண்டிருக்கிறாரே. இப்படிப்பட்ட மரபு எந்த நாட்டிலாவது உண்டா? குடியரசுத்தலை வருக்கு நாங்கள் தான் வாய்ப்பு கொடுத்தோம் என்றால் அவரை எப்படி நடத்துகிறீர்கள் என்ற கேள்வி எழுகிறது. பெண்கள் நிலை குறித்து பாஜகவின் இரட்டை வேடம் இது தான்.

இவ்வாறு சி.வீரமணி பேசினார். 

இக்கூட்டத்திற்கு திராவிடர் கழக மாவட்டத் தலைவர் மு.ஆனந்த முனிராஜன் தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் இரா.வீரபாண்டி யன் வரவேற்றார். பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் துவக்கவுரையாற்றினார். திமுக சார்பில் அமைச்சர் ஐ.பெரியசாமி, மாவட்ட துணைச்செயலாளர்கள் நாகராஜன், பிலால், மாமன்ற மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக்குழு உறுப்பினர் பி.செல்வராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் இராமலிங்கம், கே.பாலபாரதி, என்.பாண்டி, நகரச் செயலாளர் அரபு முகமது, மதிமுக என்.செல்வராகவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச்செயலாளர் ஏ.பி.மணிகண்டன், காங்கிரஸ் மாநகரத் தலைவர் துரை.மணி கண்டன், மாவட்டத் தலைவர் சதீஸ்குமார், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.அம்சா, விடுதலைச்சிறுத்தை கட்சி மாநகர மாவட்டச் செயலாளர் மைதீன் பாவா, மனித நேய மக்கள் கட்சி கிழக்கு மாவட்டச் செயலாளர் சேக்பரீத், மக்கள் நீதி மய்யம் சீனி வாசபாபு, தமிழர் சமூக நீதிக் கழகம் சுரா.தங்கப் பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர்.