districts

சொத்துத் தகராறில் ஓடும் பேருந்தில் தப்பாட்டக் கலைஞர் கழுத்தறுத்துக் கொலை

திண்டுக்கல், ஏப்.6- திண்டுக்கல் மாவட்டம் சாணார் பட்டியை அடுத்துள்ள கணவாய்பட்டியைச் சேர்ந்தவர் தமயந்தி (45). இவரது கண வர் கோபி திண்டுக்கல்லில்  ஆட்டோ ஓட்டு நராக உள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.  தமயந்தியின்  கணவர் கோபிக்கும் அவ ரது அண்ணன் ராஜாங்கத்திற்கும் சொத்துப் பிரச்சனை இருந்துள்ளது.   இது தொடர்பாக சாணார்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கு திண்  டுக்கல் நீதிமன்றத்தில்வழக்கும் நடை பெற்று வருகிறது.  இவ்வழக்கின் தீர்ப்பு வியாழனன்று வெளிவர இருந்த நிலையில் தீர்ப்பைத் தெரிந்து கொள்வதற்காக தமயந்தி கண வாய்பட்டியிலிருந்து திண்டுக்கல் வரும் தனியார் பேருந்தில் முன் சீட்டில் அமர்ந்து  வந்துள்ளார். கோபியின் அண்ணன் ராஜாங்கம்,  அவரது மகன் தேவா ஆகியோ ரும் அதே பேருந்தில் பயணம் செய்துள்ள னர்.  பேருந்து கோபால்பட்டி அருகே யுள்ள வடுகபட்டி பிரிவில் வந்த போது ராஜாங்கமும் அவரது மகனும் தாங்கள்  மறைத்து வைத்திருந்து கொடுர ஆயு தங்களைக் கொண்டு பேருந்துக்குள் ளேயே வைத்து துடிதுடிக்க தமயந்தியை கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டு கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.   தகவலறிந்து மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன்  சம்பவ இடத்  திற்கு வந்து நேரில் ஆய்வு செய்து விசா ரணை மேற்கொண்டார். தமயந்தியின் கண வர் கோபியும் சம்பவ இடத்திற்கு வந்து கதறி அழுதார்   தமயந்தியின் உடல் உடற்கூராய் விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செல்லப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி,  மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி,  மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் உள்ளிட்ட தலைவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று தமயந்தியின் உறவினர்களை சந்  தித்து ஆறுதல் கூறினர்.  தோழர் தமயந்தி திண்டுக்கல் சக்தி  தப்பாட்ட கலைக்குழுவில் செயலாற்றிய வர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக உள்ளார். மாதர் சங்கத் தில் முன்னணி தலைவராகவும் செயல் பட்டுள்ளார்.