districts

img

பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 திண்டுக்கல், ஜுன் 1- பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கங்களின் கூட்டு போராட்டக்குழு சார்பாக புதனன்று யுனைட்டெட் இந்தியா  கோட்ட அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  58 மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ள ஊதிய  உயர்வு பேச்சுவார்த்தையை உடனே துவக்க வலியுறுத்தி யும், பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார் மயமாக்கும் ஒன்றிய பாஜக அரசின் முயற்சி களைக் கண்டித்தும், இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு யுனைடெட் இந்தியா அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த குணசேகரன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் கௌத மன், நேசனல் இன்சூரன்ஸ் அதிகாரிகள் சங்கத்தின் சார்பாக  மூவேந்தர், ஓரியண்டல் இன்சூரன்ஸ் அதிகாரிகள் சங்கத்  தின் சார்பாக சந்தோஷ் ஆகியோர் பேசினர். ரஞ்சித் நன்றி  கூறினார்.  

;