திண்டுக்கல், ஜூலை 2- காட்டு நாயக்கன் இனச்சான்றிதழில் காட்டு நாயகன் என்று தவறாக மாணவ- மாணவியர்களுக்கு அச்சடித்து இனச்சான்றி தழ் தரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறை சரிசெய்து சான்றி தழ் வழங்க திண்டுக்கல் ஆட்சியர் முன்வர வேண்டும் என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினருமான கே.பாலபாரதி கேட்டுக் கொண்டுள்ளார்.
பழங்குடி மக்களுக்கு இனச்சான்று, தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும். புலை யன் இன மக்களை மீண்டும் பழங்குடி பட்டி யலில் சேர்க்க வேண்டும். காட்டு நாயக்கன் இன பழங்குடி மாணவ, மாணவியர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித் தொகை யை உடனே வழங்க வேண்டும். மலைவே டன் இன பழங்குடி மக்களுக்கு இனச்சான்று வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 2 செவ்வாய்க்கிழமையன்று திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் முன் னாள் எம்எல்ஏவும், சிபிஎம் மாநில செயற் குழு உறுப்பினருமான கே.பாலபாரதி பேசிய தாவது:
காட்டு நாயக்கனுக்கும், காட்டு நாயக னுக்கும் கூட வித்தியாசம் தெரியாத அதிகாரி கள்தான் திண்டுக்கல் மாவட்ட எஸ்.சி.எஸ்.டி. அலுவலகத்தில் பணிபுரிகிறார்களா? இதுதொடர்பாக தமிழ்நாடு மலைவாழ் மக் கள் சங்கம் சார்பாக பல முறை புகார் கொடு த்தும் இதுவரை திண்டுக்கல் மாவட்ட நிர்வா கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மலைவாழ் மக்கள் சங்கம் இந்த சான்றி தழை பல முறை அதிகாரிகளிடம் காட்டி புகார் கொடுத்தும் இதுவரை அந்த தவறை சரி செய்யவில்லை தவறு செய்த அதிகாரிகள் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டுக்கல் ஆட்சியரின் கவ னத்திற்கு இதுவரை வராமல் இருந்தால் உடனடியாக தலையீடுசெய்து காட்டு நாயகன் என்ற தவறான சான்றிதழை மாற்றி காட்டு நாயக்கன் என்று வழங்க வேண்டும். தற்போது மாவட்ட ஆட்சியர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழங்குடி மக்கள் குறித்தும் அவர்களது குறை கள் குறித்தும் கேட்டறிந்து சரி செய்வ தாக கூறப்படுகிறது. அதை உடனே செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தா.அஜாய்கோஷ் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்டத்தலைவர் என்.பெருமாள், மாவட்டச்செயலாளர் எம்.ராமசாமி, மலைவாழ் மக்கள் சங்க மாவட்டத்தலைவர் எம்.செல்லையா, மாநிலக்குழு உறுப்பினர் பொன்னுச்சாமி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் ரவிச்சந்திரன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.சௌந்திரராஜன் மற்றும் சங்க நிர்வாகிகள் பாக்கியராஜ், ஈஸ்வரன், மீனா, மாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
(நநி)