districts

மாடியில் இருந்து விழுந்து பலியான கல்லூரி மாணவி உடல் அவசரமாக எரிப்பு: மாதர் சங்கம் குற்றச்சாட்டு

ஒட்டன்சத்திரம், பிப்.28-  ஒட்டன்சத்திரம் அருகே கல்லூரியில் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த மாணவி யின் உடலை பதப்படுத்தி புதைக்காமல் எரிக்க அவசர அவசரத்தில் நடவடிக்கை எடுத்த காவல்துறையின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக மாதர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கேதையுறும்பு ஊராட்சி பழைய பட்டியைச் சேர்ந்த கன்னியப்பன்- பழனி யம்மாள் மகள் கார்த்திகாஜோதி(வயது 18) இவர் ரெட்டியார்சத்தரம் அருகே உள்ள செம்ம டைப்பட்டியில் தனியார் நர்சிங் கல்லூரி விடுதி யில் தங்கி பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து  வந்தார். இவர்கள் தலித் பிரிவைச் சேர்ந்த வர்கள். கடந்த 21-ஆம் தேதி காலை கல்லூரி வளா கத்தில் உள்ள மூன்றாவது மாடியிலிருந்து  கீழே விழுந்து படுகாயமடைந்தார். ஒட்டன் சத்திரம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கார்த்திகாஜோதி சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். கார்த்திகாஜோதியின் உடல் திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. பின்னர் காவல்துறையினர் உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர். அன்று மாலையே அவரது உடல் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது இது குறித்து மாதர் சங்க திண்டுக்கல் மாவட்ட நிர்வாகி வனஜா கூறியதாவது: கார்த்திகா ஜோதியை யாராவது தள்ளிவிட்டனரா அல்லது தானாகக் குதித்து தற்கொலைக்கு முயன்றாரா என்பது குறித்து காவல்துறையின் முறையான விசாரணை நடைபெறாத நிலையில்,  மாணவி இறப்பு சந்தேகம் மரணம் என்று சமூக ஆர்வ லர்கள் குற்றம்சாட்டும் நிலையில் காவல்துறை யினர் மாணவியின் உடலை முறைப்படி பதப்படுத்தி உடலை அடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்காமல் அவசர அவசரமாக எரியூட்டியது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் இறப்பு குறித்து முறையான விசாரணை நடத்தி இதுபோல சம்பவங்கள் இனி ஏற்படாதவாறு தடுக்க மாவட்ட காவல்  துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.