நத்தம், மே 16- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள என்.பி.ஆர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் சரவணன் தலைமை தாங்கி னார். பெங்களூரு இந்திய மேலாண்மை கழக முதன்மை கல்வி அலுவலர் அரவிந்தன் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். பின்னர் மதுரை காமராசர் பல்கலைக்கழக அளவில் முதல் தரம் பெற்ற 22 மாணவிகள் கௌரவிக்கப்பட்டனர். இதில் 520 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள்,பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.