districts

img

ஒட்டன்சத்திரம் தெற்கு பகுதியில் சிபிஎம் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் வாக்கு சேகரிப்பு

திண்டுக்கல், ஏப்.3- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தெற்கு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்திற்கு கிராமங்கள் தோறும் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.  புதனன்று காலை 7 மணிக்கு சிபிஎம் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் தங்கச்சியம்மா பட்டியில் வாக்கு சேகரித்தார்.

இதனையடுத்து கொசவபட்டி, காப்பிலியபட்டி, காவேரி யம்மாபட்டி, விருப்பாச்சி, சாமியார்புதூர், சின்னக்கரட்டுப்பட்டி, பெரிய கரட்டுப்பட்டி, பெரியகோட்டை, ரெட்டியபட்டி, வீரலபட்டி, வேலூர், அன்னப்பட்டி, தாசரிபட்டி, புதுக்கோட்டை, சத்திரப்பட்டி, சிந்தல வாடம்பட்டி, இராமபட்டிணம்புதூர் ஆகிய கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.  இதனையடுத்து மாலை 3.40-க்கு கொல்ல பட்டியில் வாக்கு சேகரிப்பை துவங்கினார். சீரங்ககவுண்டன்புதூர், கரூவூலக காலனி, சம்சுதீன் காலனி, ஆர்.எஸ்.பி.நகர், கே.கே.நகர்,  நாகணம்பட்டி, ஆத்தூர், ஏ.பி.பி.நகர், சத்யா நகர், தும்மிச்சாம்பட்டி புதூர், தும்மிச்சாம்பட்டி, திருவள்ளுவர் சாலை, நல்லாக்கவுண்டன் நகர், சாஸ்தா நகர், காந்தி நகர் ஆகிய கிராமங்க ளில் வாக்கு சேகரித்தார்.  

கிராமங்கள் தோறும் சச்சிதானந்தத்திற்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆரத்தி எடுத்து திலகமிட்டும், கும்ப மரியாதை செய்தும், வரவேற்றனர்.  நிகழ்வில், உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி உள்ளிட்ட திமுகவின் முன்னணித் தலைவர்கள், சிபிஎம் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள், மதிமுக, முஸ்லீம் லீக், உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.