districts

img

தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம்

சின்னாளபட்டி, ஜூன் 10- திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்களின் துறையின்மூலம் உள்மாநில தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது  தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் ஆர்.பாலகும்பகன் விளக்கிப் பேசினார். பயிற்சி முகாமை முன்னிட்டு தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் 5 கிராமங்களுக்கு கிராம மகத்துவ திட்டத்தின் மூலம் 5 ஆயிரம் தேனீ பெட்டிகள் இலவசமாக பெறப்பட்டு 4ஆயிரம் பெட்டிகள் இலவசமாக வழங்கப்பட்டன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேனீ பெட்டிகள் இருந்தும் 1000 கிலோ தேன் ஒரே நாளில் அறுவடை செய்யப்பட்டது. பயிற்சி பெறும் விவசாயிகளுக்கு தேன்மதிப்பூட்டுதல், சந்தைப்படுத்துதல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.