districts

img

தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்து  

வத்தலக்குண்டு அருகே பேருந்து மீது இருசக்கர வாகனம் நேருக்குநேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.  

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே முத்தலாபுரத்தை சேர்ந்த பிரகாஷ், சந்தோஷ்பாண்டி, கோபால் ஆகிய 3 இளைஞர்கள், ஒரே இருசக்கர வாகனத்தில் நிலக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். வத்தலக்குண்டு-மதுரை நெடுஞ்சாலையில் பூசாரிப்பட்டி அருகே ஒரு பேருந்தை முந்தச் செல்ல முயன்றுள்ளனர்.    

அப்போது எதிரில் நிலக்கோட்டையிலிருந்து வத்தலக்குண்டு நோக்கி சென்ற தனியார் பேருந்து மீது, மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கி 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  

இதுகுறித்து தகவலறிந்து வந்த வத்தலக்குண்டு மற்றும் நிலக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மீட்கப்பட்ட 3 பேரின் உடலையும் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்தவிபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.