திண்டுக்கல், மார்ச் 1- அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கழிப்பறையை காணவில்லை என்று மாமன்ற கூட்டத்தில் சிபிஎம் மாமன்ற கவுன்சிலர் புகார் தெரிவித்தார். திண்டுக்கல்லில் மாதா மாதம் மாமன்ற கூட்டம் நடை பெறுகிறது. இந்த மாத மாமன்றக்கூட்டத்தில் மேயர் மைக்கைத் தவிர பிற மைக்கு கள் சரியாக செயல்பட வில்லை. இதனால் அதிகாரி களும் கேள்வி எழுப்பிய கவுன்சிலர்களும் பதில் அளிக்கக்கூடிய அதிகாரி களும் மைக்கை பெயரள விற்கு கையில் வைத்துக் கொண்டு கனத்த குரலில் மேயரிடம் குறை நிறைகளை தெரிவித்தனர். இதில் சத்த மாகப் பேசிய சிபிஎம் மாமன்ற உறுப்பினர் ஜோதிபாசு வுக்கு தொண்டை அடைத் தது. அதிகாரிகள் தண்ணீர் கொடுத்தனர். இந்த நிலை அறிந்த 18 வது வார்டு திமுக கவுன்சிலர் சித்திக் செயல் படாத மைக்கை வாங்காமல் தன்னுடைய வார்டு குறை களை மைக்கில் பேசாமல் சத்தமாக கூறினார். 16வது வார்டு திமுக உறுப்பினர் சேகர் இருக்கையில் இருந்து எழுந்து வந்து நேரடியாகவே மேயரிடம் சென்று ஜி.டி.என். சாலை நீண்ட நாட்களாக போடப்படாத காரணத்தால் பொதுமக்கள் என் மீது கடு மையான கோபத்தில் உள்ள னர். நடமாட முடியவில்லை என்று சொல்லிவிட்டுச் சென் றார். சிபிஎம் மாமன்ற கவுன் சிலர் ஜோதிபாசு, அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த கழிப்பறையை காண வில்லை என்றும் அடிக்கல் நாட்டிய கல்வெட்டு ஆகிய வற்றை பிளக்ஸ் பேனர் களாக பிடித்துக்கொண்டு நின்றார். மேலும் மன்றக் கூட்டத்தில் தனது எதிர்ப்பை தெரிவிக்க கருப்பு கோட் அணிந்து வந்திருந்தர்.
சிலையால் விஷவாயு கசிவு
2வது வார்டு சிபிஎம் உறுப்பினர் கே.எஸ்.கணே சன் பேசுகையில், திண்டுக் கல் மலைக்கோட்டை கோட் டைக்குளத்தில் அமைக் கப்பட்டுள்ள தீர்த்தத் தொட்டியில் ஒருவர் விழுந்து விஷவாயு தாக்கி இறந்தார். அந்த தொட்டியில் பிள்ளை யார் சிலைகளை கரைப்ப தால் சிலையில் உள்ள பெயிண்ட் பிளாஸ்டர் ஆப் பாரீஸ் உள்ளிட்ட ரசாய னக்கழிவுகளால் மாசடைந்து விஷவாயு உருவாகியிருக்கி றது. எனவே அந்த தொட்டி யில் ரசாயன பூச்சு உள்ள பிள்ளையாரை கரைக் கக்கூடாது. எங்காவது ஓடும் ஆற்றில் கொண்டு போய் கரைக்க வேண்டும் . கரூர் ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் நீண்ட காலமாக நடைபெறாமல் உள்ளது .மேயர், துணைமேயர் ஆகி யோர் மாவட்ட ஆட்சியர் கவ னத்திற்கு கொண்டு சென்று உடனடியாக திறக்க வேண் டும். தேசிய நெடுஞ்சாலை யில் உள்ள பாலதிருப்பதி மாநகராட்சி துவக்கப் பள்ளி மற்றும் அங்கன்வாடி இரண்டையும் வேறு இடத் திற்கு மாற்ற வேண்டும். ஆத்தூர் நீர்த்தேக்கத்தில் உள்ள 3 பம்புசெட் மோட் டார்களின் ஒன்று வேலை செய்யவில்லை. அதை சரி செய்து கோடைகாலத்தில் தொடர்ந்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கணேசன் கேட்டுக்கொண்டார். மேலும் மாமன்ற கூட்ட அரங்கில் பத்திரிக்கையா ளர்கள் அல்லாமல் கவுன் சிலர்களுக்கு வேண்டிய வர்கள், டிரைவர்கள், பி.ஏ. என மன்ற கூட்டத்திற்கு தொடர்பில்லாதவர்கள் நிறைந்திருந்தனர். சிலர் நிருபர்களைப் புகைப்படம் எடுத்துக்கொண்டு செய்தி சேகரித்தனர். கூட்டத்தை முறைப்படுத்த அதிகாரிகள் யாரும் இல்லை. பொதுவாக மாமன்ற பொருள் நகல்கள் கவுன் சிலர்களுக்கும், பத்திரிக் கையாளர்களின் அலுவல கங்களுக்குச் சென்று ஒரு நாளுக்கு முன்பே கொடுப் பது வழக்கம். ஆனால் தற்பொழுது மன்ற பொருள் நகல்கள் மன்றக்கூட்டம் நடைபெறும் பொழுது வழங்கப்படுகிறது. இத னால் மன்ற பொருளை படித்து எப்படி விவாதிப்பது என்று கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர் .சிறப்பு கூட்டம் மற்றும் அவசர கூட்ட மன்ற பொருள் நகல்களை யும் 3 நாட்களுக்கு முன்பே கொடுக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் தெரி வித்தனர்.