திண்டுக்கல், ஆக. 26 - பட்டியல் வகுப்பினருக்கு உள்ளேயே அழுத்தப்பட்ட பிரிவின ராக இருக்கும் அருந்ததியர் மக்க ளுக்கு, தமிழகத்தில் 3 சதவிகித உள் இடஒதுக்கீடு வழங்கியது செல் லும் என்று உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது.
இது, சமூக நீதிக்கான போராட்டத் தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் அருந்ததியர் உள்ஒதுக்கீட்டிற்கான நீண்ட நெடிய போராட்டத்தை- அருந்ததியர் இயக்கங்களை ஒன்றுதிரட்டி முன் னெடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, உள்ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேறிய பின்னணியில், அதனை பாதுகாப்பதற்கான சட்டப் போராட்டத்திலும் தன்னை முழுமை யாக இணைத்துக் கொண்டது. தற் போது அந்த சட்டப் போராட்டத்தி லும் வெற்றி கிடைத்துள்ள நிலை யில், அதனை வரவேற்கும் விதமாக ஆகஸ்ட் 29 அன்று திண்டுக்கல்லில் சிறப்பு மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.
அன்று மாலை 4 மணிக்கு திண்டுக்கல் ஆர்.எம். காலனியில்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில முன்னாள் செயலாளர் தோழர் என். வரதராஜன் நினைவுத் திடலில் நடைபெறும் இம்மாநாட்டி ற்கு கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் பி. செல்வராஜ் தலைமை வகிக்கிறார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செய லாளர் கே.டி. கலைச்செல்வன் வர வேற்கிறார்.
சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் பி. சம்பத், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் இராமலிங்கம், கே. பால பாரதி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநிலப் பொதுச்செயலாளர் கே. சாமுவேல்ராஜ், திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், ஆதித்தமிழர் பேரவையின் மாநிலத் தலைவர் இரா.அதியமான், ஆதித்தமிழர் கட்சியின் மாநிலத் தலைவர் கு. ஜக்கையன், தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநிலத் தலைவர் நாகை. திருவள்ளுவன், திராவிடத் தமிழர் கட்சியின் மாநிலத் தலைவர் வெண்மணி, தமிழர் சமூக நீதிக்கழகத்தின் மாநிலத் தலைவர் சுரா. தங்கபாண்டியன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த. செல்லக்கண்ணு, மாநில துணைப் பொதுச் செயலாளர் பி. சுகந்தி, மாநிலச் செயலாளர் யு.கே. சிவ ஞானம் ஆகியோர் சிறப்புரையாற்று கின்றனர்.
சிபிஎம் நகரச் செயலாளர் ஏ. அரபு முகமது நன்றி கூறுகிறார்.
இந்த மாநாட்டில் பழங்குடி மக்களின் கலைநிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளன. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். (நநி)