districts

மான்கறி கடத்தியவர் கைது

பென்னாகரம், மார்ச் 31- பென்னாகரம் அருகே இருசக்கர வாகனத்தில் மான்கறியை கடத்தியவரை காவல் துறையினர் கைது செய்து, அவருக்கு ரூ.50  ஆயிரம் அபராதம் விதித்த னர். தருமபுரி மாவட்டம், பென்னாகரத்திற்கு கிருஷ் ணகிரி மாவட்டங்களில் இருந்து மான் கறி கொண்டு வரப்படுவதாக மாவட்ட வன அலுவலகத்திற்கு ரக சிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், பென்னாகரம் சரக அலுவலர் முருகன் தலைமையில் வனவர் செல்லமுத்து, வனகாப் பாளர்கள் ஆனந்தராஜ், தங்கவேல் ஆகியோர் கொண்ட குழுவினர் பென் னாகரம் -  தருமபுரி சாலை யில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந் தேகப்படும் வகையில் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், புள்ளிமான் கறி கடத்தி வரப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.  இதையடுத்து நடை பெற்ற விசாரணையில், அவர் கிருஷ்ணகிரி மாவட் டம், ஊத்தங்கரை வெள்ளி மலை கிராமத்தைச் சேர்ந்த ஹரிஸ் (17), என்பது தெரிய வந்தது. மேலும், இவரைப் பின்தொடர்ந்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த பூபா லன் (37), என்பவர் தப்பி  சென்றுவிட்டார். தப்பி ஓடி யவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். இதற் கிடையே மான்கறி கடத்தி வந்த ஹரிஸ் கைது செய்யப் பட்டதுடன், அவருக்கு ரூபாய் 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், தருமபுரி மாவட்ட காப்பு காடுகளில் விலங்குகளை வேட்டையாடும் நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என மாவட்ட வன அலுவ லர் எச்சரிக்கை விடுத்துள் ளார்.