districts

img

கரும்பின் தரம் குறித்து ஆய்வு

தருமபுரி, டிச.31- தருமபுரி, மொடக்கேரி கிராமத்தில் பொங்கல் பரிசு வழங் குவதற்காக கரும்பின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி நேரில் ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு கரும்பு வழங்கு தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி கரும்பின் தரம் குறித்து ஏ.கொல்லஅள்ளி ஊராட்சி, மொடக்கேரியில் உள்ள  தோட்டத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த  ஆய்வின் போது கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராமதாஸ், நேர்முக உதவியாளர் (வேளாண்மை) குணசே கரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.