தருமபுரி, மார்ச் 31- தருமபுரியை அடுத்த குக்கல்மலை கிரா மத்தில் பல தலைமுறைகளாக சாகுபடி செய்துவரும் விவசாயிகளை வெளி யேற்றும் முயற்சியை கைவிட வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினியிடம் மனு அளிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம் குக்கல் மலை கிராம மக்கள் வியாழனன்று மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே திப்பிரெட்டி அள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது குக்கல் மலை கிராமம். இங்கு இஸ்லாமிய மக்கள் கணிசமாக குடியிருந்து வருகின்றனர். இந்த மக்கள் கடந்த அறுபது ஆண்டு களுக்கு முன்பு 30 ஏக்கர் நிலத்தை ஜமீன் காலத்தில் விலைக்கு வாங்கினர். தற்போது சுமார் 70 குடும்பங்களாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். மேலும், இவர்கள் பயன்பாட்டில் உள்ள நிலத்தில் விவசாயமும் செய்து வருகின்றனர். மேலும், இந்த சொத்துக்களுக்கு இது வரை அரசுக்கு செலுத்த வேண்டிய வரி களை முறையாக செலுத்தி வருகின்றனர். இந்த நிலங்களில் சாகுபடியும் செய்து இதில் வரும் சிறுவருமானத்தை வைத்து வாழ்க்கை நடத்துகின்றனர். இதனிடையே, பயிர்களை காக்க நிலத்தை சுற்றி கம்பி வேலி அமைத்தனர். இந்நிலையில் திடீ ரென முன் அறிவிப்பின்றி, வருவாய் துறை அதிகாரிகள் கடந்த 22 ஆம் தேதி இவர்கள் பயன்படுத்தி வரும் நிலம் அரசுக்கு சொந்தம் என்றும், எங்களை அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர். நாங்கள் சிறுபான்மை இனத்தவர்கள் என்ற ஒரே காரணத்தால் சட்டவிதிகளை மீறி எங்களை அப்புறப்படுத்த முயற்சி செய்யும் அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வா கம் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.