districts

img

விதொசவின் 5 நாள் காத்திருப்புப் போராட்டம் வெற்றி!

இட்லப்பட்டி போயர் சமூக மக்களின் பல்வேறு அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைமையில் நடைபெற்று வந்த 
5 நாள் காத்திருப்புப் போராட்டத்தின் வெற்றியாக, ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அப்பகுதி மக்களின் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

தருமபுரி மாவட்டம், அரூர்  வட்டம், மாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது இட்லப்பட்டி கிராமம். இங்கு 250க்கும் மேற்பட்ட, மிக வும் பிற்படுத்தப்பட்ட போயர் சமூக  குடும்பங்கள் உள்ளன. இவர்கள் கல்லுடைப்பது, கிணறு வெட்டும் பணி உள்ளிட்ட தினக்கூலி வேலை  செய்து வாழ்க்கை நடத்தி வரு கின்றனர்.

இக்கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பல  தலைமுறைகளாக நத்தம் புறம்  போக்கு இடத்தில் வீடு கட்டி குடி யிருந்து வருகின்றனர். இதுவரை இவர்களுக்கு மனைப்பட்டா வழங்கப்படவில்லை. இதனி டையே வீடு இல்லாத மக்களுக்கு  இலவச வீட்டு மனைப்பட்டா வழங்  கப்பட்டது. ஆனால், வழங்கப்பட்ட பட்டாவுக்கான இடத்தை அளந்து வழங்கவில்லை.

மேலும், இம்மக்களுக்கென சுடு காட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை  சாதி ஆதிக்க சக்தியினர் ஆக்கிர மிப்பு செய்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒகேனக்கல் குடி நீர் வழங்கவில்லை. மேற்கண்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி அரூர் வட்டாட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர், கோட்டாட்சி யர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த அப்  பகுதி பொதுமக்கள் அகில இந்திய  விவசாய தொழிலாளர் சங்கத்தின்  தலைமையில் அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கடந்த ஜன.30  ஆம் தேதியன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

5 நாட் கள் தொடர்ந்து இப்போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், சனியன்று சங்க தலைவர்களிடம் வருவாய்த்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். அரூர் வட்  டாட்சியர் அலுவலகத்தில் வட் டாட்சியர் கனிமொழி, காவல் உதவி ஆய்வாளர் உமாசங்கர் ஆகி யோர் பேச்சுவார்த்தை மேற் கொண்டனர். அப்போது, இலவச வீட்டுமனை  பட்டா வழங்கிய இடத்தை ஆக்கிர மிப்பு செய்தவரிடமிருந்து மீட்டு பய னாளிகளுக்கு வழங்குவது, சுடு காட்டுக்கு இடம் வழங்குவது, ஒகே னக்கல் குடிநீர் வழங்கப்படும் என  உறுதியளிக்கப்பட்டது.

அதன டிப்படையில் காத்திருப்புப் போராட்டம் கைவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து உடனடி யாக பயனாளிகளுக்கு வழங்கிய  இலவச வீட்டுமனைப் பட்டாவுக்  கான இடத்தை ஆக்கிரமிப்பாளர் களிடம் இருந்து மீட்க, இட்லப் பட்டி கிராமத்தில் வட்டாட்சியர் கனி மொழி, வருவாய் ஆய்வாளர் குமார், கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் ஆகியோர் ஆய்வு மேற்  கொண்டு, ஆக்கிரமிப்பு செய்யப் பட்ட இடத்தை மீட்டனர்.

இதைத்தொடர்ந்து, விதொச மாநில பொதுச்செயலாளர் வீ. அமிர்தலிங்கம், மாவட்டச் செய லாளர் எம்.முத்து, ஒன்றியச் செய லாளர் கே.குமரேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செய லாளர் பி.குமார், விதொச நிர்வாகி கள் சி.வேலாயுதம், தங்கராஜ் ஆகி யோர் இட்லப்பட்டி கிராமத்திற்கு நேரில் சென்று மீட்கப்பட்ட இடத்தை பார்வையிட்டனர். அப் போது, தங்களது கோரிக்கைகளை  போராடி பெற்றுத்தந்தமைக்கு அப்  பகுதி பொதுமக்கள் சங்கத்தின் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த னர்.