தருமபுரி ஜூன் 10- பால் தொழிலை ஊக்குவிக்க சிறப்பு திட் டங்களை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளர் ஏ.குமார் விடுத்துள்ள அறிக்கையில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தருமபுரி தொகு தியில், ‘இந்தியா’ கூட்டணி சார்பில் போட்டி யிட்ட திமுக வேட்பாளர் ஆர்.மணிக்கு, வாக்க ளித்து வெற்றி பெறச்செய்த வாக்காளப் பெரு மக்களுக்கு, கட்சியின் மாவட்டக்குழு பாராட் டுகளையும். நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. மாவட்டத்தில் சமீபத்தில் பெய் துள்ள பருவமழையின் காரணமாக விவசாயி கள் சாகுபடியைத் தொடங்கியுள்ளனர்.
எனவே, விவசாயிகளுக்கு வேளாண் துறை மூலம் மானிய விலையில் விதை, உரம் தடை யின்றி கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் விவசா யத்திற்கு அடுத்ததாக பால் உற்பத்தி ஒரு முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது. தனி யார் நிறுவனங்கள் பால் உற்பத்தியாளர்களி டமிருந்து பெருமளவில் பாலை கொள்மு தல் செய்து வருகின்றன. ஆவின் மூலம் நாளொன்றுக்கு பால் கொள்முதல் 2019 ஆம் ஆண்டில், 2.3 லட்சம் லிட்டர்க ளாக இருந்தது. தற்போது 1.10 லட்சம் லிட்டர்க ளாக குறைந்துள்ளது.
பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.35, எருமைப்பால் ரூ.42க்கும் அளிக்கப்படுகிறது. ஆவின் பால் கொள்மு தலை அதிகப்படுத்திட பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். தீவனம் விலை உயர்வு காரணமாக, கட் டுப்படியான விலை கிடைக்காமல் விவசாயி கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும். மானிய விலையில் தீவனம், ஆவின் நிறுவனம் மூலம் பால் கொள்முதல், கறவை மாடுகள் வாங்கு வதற்கு கடன் வசதி ஆகியவற்றின் மூலம் பால் உற்பத்தியைப் பெருக்க அரசு சிறப்பு திட்டங் களை வகுத்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.