districts

img

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு

தருமபுரி, ஜூலை 17- ஒன்றிய மோடி அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை கைவிட வலியுறுத்தி, தருமபுரி, இண்டூர் பகுதிக்குழு  சார்பில் தெருமுனை பிரச்சார இயக்கம் புத னன்று நடைபெற்றது.

ஒன்றிய அரசின் மூன்று குற்றவி யல் சட்டங்களுக்கு எதிராக நாடு  முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந் துள்ளது. அரசியல் கட்சிகள், வழக்கறிஞர்கள், முற்போக்காளர் கள் என அனைத்து தரப்பினரும், இச்சட்டத்தின் ஆபத்தை உணர்ந்து போராட்ட களத்தில் இறங்கியுள்ள ளனர். இதன்ஒருபகுதியாக தமிழ கம் முழுவதும் ஆவேச போராட் டத்தை நடத்த மார்க்சிஸ்ட் கட்சி அணிகளுக்கு அழைப்பு விடுத்தி ருந்தது. 

இதன்தொடர்ச்சியாக, தரும புரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிக ளில் மார்க்சிஸ்ட் கட்சியினர் தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்ற னர். இன்டூர் பகுதியில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு பகுதிக் குழு செயலாளர் ராஜா தலைமை ஏற்றார். இதில், கட்சியின் தருமபுரி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சின்னசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் கே.என்.மல்லையன் உள்ளிட்டோர் உரையாற்றினர். 

இதனைத்தொடர்ந்து, கொணப் பள்ளம் பழைய இண்டூர், குப்பு செட்டிப்பட்டி, ராமர் கூடல், பேடர அள்ளி, பூச்செட்டிப்பட்டி, தளவாய் அள்ளி உள்ளிட்ட இடங்களில் தெரு முனை பிரச்சார கூட்டம் நடை பெற்றது. 

இந்த பிரச்சார இயக்கத்தில், மோடி அரசு கொண்டு வந்துள்ள புதிய மூன்று குற்றவியல் சட்டங்க ளின் ஆபத்து குறித்து உரையாற்றி னர். இதில், சென்ற மக்களவை யின் இறுதிக் கூட்டத்தில் ஜனநாயக விரோத முறையில் நிறைவேற்றப் பட்ட மூன்று குற்றவியல் சட்டங் களை ஜூலை 1 முதல் ஒன்றிய பாஜக அரசு அமல்படுத்தியுள்ளது. இதுவரை நடைமுறையில் இருந்து வந்த இந்திய தண்டனைச் சட்டம் பாரதிய நியாய சன்ஹிதா என்ற பெயரிலும், குற்றவியல் நடை முறைச் சட்டம் பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா என்ற பெயரி லும், இந்திய சாட்சியச் சட்டம் பாரதிய சாக்சிய அதினியம் என்ற பெயரிலும் அமல்படுத்தப்பட்டிருக் கிறது. சட்டங்கள் ஆங்கில மொழி யில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற அரசியல் சாசன விதிகளுக்கு மாறாக, இந்தி, சமஸ்கிருத மொழி யில் சட்டங்களின் பெயர்கள் வடிவ மைக்கப்பட்டுள்ளன. 

காவல் நிலையத்தில் புகார் அளித்தவுடன் உரிய விசாரணை மேற்கொண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்பது இதுவரையில் இருந்த நடைமுறை. இனி 14 நாட் கள் வரையிலும் இதனைத் தாம தப்படுத்த முடியும். இதுவரை காவல் நிலையத்தில் ஒரு கைதியை 15 நாட்கள் வரை மட்டுமே வைத்து விசாரிக்க முடியும். புதிய சட்டத்தின் படி 15 நாட்களுக்கு மேலாகவும் விசாரிக்கலாம். புதிய சட்டம் கை விலங்கு பூட்டுவதற்கும் வழிவகை செய்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக எவர் ஒருவரையும் தேச துரோகி எனக் குற்றம் சுமத்தி கைது செய்வதற்கு புதிய சட்டம் இடமளிக்கிறது. புதிய சட்டம்  நலி வடைந்தவர்களையும், ஏழைகளை யும், ஒடுக்கப்பட்ட மக்களையும் மட்டுமில்லாமல், அரசுஅதிகாரத் திற்கு எதிராகக் குரல்கொடுப் பவர்களையும் தண்டிக்கும் வகை யில் அமைந்துள்ளது.இது ஜனநாய கத்துக்கு விரோதமானது. அடிப் படை மனித உரிமைகளைப் பறிக் கும் பாஜக அரசின்புதிய சட்டங் களைத் திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.