districts

img

தருமபுரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணி வெற்றி!

தருமபுரி, ஜூன் 4- தருமபுரி மக்களவைத் தொகுதி யில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ.மணி 4 லட்சத்திற்கும் அதிக மான வாக்குகள் பெற்று வெற்றி பெற் றார்.

மக்களவைத் தேர்தல் வாக்குப்ப திவு கடந்த ஏப்ரல் 19 முதல் 7 கட்டங் களாக நடைபெற்று ஜூன் 1 ஆம் தேதி யுடன் நிறைவுற்றது. அந்த வகையில்,  தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19 ஆம்  தேதியன்று  முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைப்பெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்கு கள் எண்ணப்பட்டு முடிவுகள்  அறிவிக்கப்பட்டது. தருமபுரி நாடா ளுமன்ற தொகுதியில் இந்தியா கூட் டணி சார்பில் திமுக வேட்பாளர் ஆ. மணி, அதிமுக வேட்பாளர் ஆர்.அசோ கன், பாஜக கூட்டணியின் சார்பில் பாமக வேட்பாளராக செளமியா அன் புமணி உள்ளிட்ட 26 பேர் போட்டியிட் டனர். தருமபுரி அரசு பொறியியல் கல் லூரியில் வாக்கு எண்ணப்பட்ட நிலை யில் முதல் 10 சுற்றில் பாமக வேட்பா ளர் செளமியா அன்புமணி முன்னி லையில் இருந்தார். பிறகு 11 ஆவது  சுற்றில் இருந்து 23 சுற்று வரை பாமக  வேட்பாளர் செளமியா அன்புமணியை காட்டிலும், ஒவ்வொரு சுற்றிலும் கூடு தல் வாக்கு பெற்று முன்னிலைக்கு வந்தார். இறுதியாக 23 ஆவது சுற் றில் தபால் வாக்குகள் உட்பட அனைத்தும் எண்ணப்பட்டதில், திமுக  வேட்பாளர் ஆ.மணி 429301 வாக்குக ளும், பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி 408445 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஆர்.அசோகன்  291590 வாக்குகளும் பெற்றனர். பாமக வேட்பாளர் செளமியா அன்பு மணியை காட்டிலும் கூடுதலாக 20856 வாக்கு பெற்று திமுக வேட்பாளர் ஆ.மணி வெற்றிபெற்றார். வெற்றி  பெற்ற திமுக வேட்பாளர் ஆ. மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவ லர் சான்றிதழ் வழங்கினார். கடந்த  தேர்தலில் அன்புமணி தோல்வியுற்ற  நிலையில், இந்த முறை அவரது  மனைவி சௌமியா தோல்வி அடைந் தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனைத் தொடர்ந்து, தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஆ.மணி, வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட  தேர் தல் அலுவலருமான கி.சாந்தி வழங் கினார். இந்நிகழ்ச்சியில், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன் னீர்செல்வம் திமுக கிழக்கு மாவட்ட  செயலாளர் தடங்கம் பெ.சுப்பிர மணி மேற்கு மாவட்டச் செயலாளர் முனைவர் பா.பழனியப்பன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.